சொர்க்கம் செல்ல அச்சமில்லை.. 51 ஆண்டுக்கு பிறகு.. டீகோட் ஆன சோடியாக் கொலையாளியின் ரகசிய குறிப்புகள்
வாஷிங்டன்: 51 ஆண்டுகளுக்கு பிறகு சோடியாக் கொலையாளியின் ரகசிய குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Recommended Video
அமெரிக்காவின் வடகலிபோர்னியா மாகாணத்தில் சைக்கோ கொலைக்காரனை போல் சோடியாக் கொலைக்காரன் ஒருவர் இருந்தார். அவர் இள வயதுடைய ஆண், பெண்களை மர்மமான முறையில் கொலை செய்து அது தொடர்பான விவரங்களை ரகசிய குறிப்புகள் (CIPHER) மூலம் போலீஸுக்கு தெரிவிப்பார்.
1970, 1980 களில் கலிபோர்னியா பகுதியில் சில கொலைகளை அவர் செய்து குறிப்புகளையும் அனுப்பியுள்ளார். அதில் அவர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்வது சற்று கடினம்.

டீகோடு
50 ஆண்டுகளுக்கு முன்நர் 1969-இல் சான் பிரான்சிஸ்கோ கிரானிக்கிள் பத்திரிகைக்கு அவர் அனுப்பியிருந்த சைபர்கோடில் சொல்லியுள்ள செய்தியை அடையாளம் காண முடியாமல் பலர் தவித்தனர். அப்போது மூன்று அடங்கிய ஒரு குழுவினர் அந்த கோடை டீகோட் செய்தனர்.

அடையாளம்
டேவிட் ஆரன்சார், ஜார்ல் வேன், சாம் பிளேக் ஆகிய மூன்று பேர்தான் அந்த சைபர் கோடை அடையாளம் கண்டனர். கடந்த 2006 முதல் அவர்கள் இந்த பணியை செய்து வருகிறார்கள். எந்தவித புல்ஸ்டாப்பும் இல்லாமல் அனைத்து எழுத்துகளும் பெரிய எழுத்துகளாக எழுத்துப் பிழையுடன் அந்த சைபர் கோட் இருந்தது.

துளி அளவு
அந்த சைபர் கோடில் அந்த கொலைக்காரர் என்ன தெரிவித்துள்ளார் என்றால், என்னை பிடிக்க நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள் என நம்புகிறேன். என்னை விஷ வாயு நிரம்பிய அறைக்குள் அடைப்பது குறித்து நான் துளி அளவு கூட அச்சப்படவில்லை.

அச்சம்
ஏன் என்றால் அப்படி நீங்கள் செய்தால் நான் விரைந்து சொர்க்கத்தை அடைவேன். என்னிடம் வேலை செய்ய நிறையபேர் உள்ளனர். அவர்கள் எல்லோரும் இறப்புக்கு பின்னர் சொர்க்கத்தில் எதுவும் இல்லை என நினைப்பதால் மரணத்தை எண்ணி அச்சப்படுகிறார்கள். ஆனால் எனக்கு அப்படியில்லை என அந்த கொலைக்காரர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications