காதலன் கண்களை தோண்டிய காதலி! "இனிமேல் சைட் அடிப்பியா.." அடுத்த நடந்த பகீர்! அதிர்ச்சியில் போலீசார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மற்ற பெண்களை சைட் அடிக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காகத் தனது காதலனின் கண்களைப் பெண் ஒருவர் தோண்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா என்ன தான் சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் கூட, அங்கே நடக்கும் பல சம்பவங்கள் நம்மைச் சிரிக்க வைப்பதாகவும் அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருக்கும்.

 A US woman stabs needle in his partner eye for looking at other women

இதெல்லாம் ஒரு காரணமா என நாம் யோசிப்போம்.. அதற்கெல்லாம் கூட அமெரிக்கர்கள் சண்டையிடுவார்கள். விமானங்களில் பயணிகளிடம் அல்லது பணிப் பெண்களிடம் நிதானத்தை இழந்த அமெரிக்கர்கள் குறித்த பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.

அமெரிக்கா: அதுபோன்ற ஒரு வினோதமான நிகழ்வு தான் இப்போது அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. ஆனால், இது அனைத்தையும் விட வினோதமான ஒன்றாக இருக்கிறது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவின் மியாமியை பகுதியில் வசித்து வருபவர் 44 வயதான சாண்ட்ரா ஜிமெனெஸ்.. இவரது காதலன் உடன் லிவ் இன் உறவில் இருந்துள்ளார். சுமார் 8 ஆண்டுகளாக இருவரும் இப்படி லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

சாண்ட்ராவின் காதலன் அங்கே மற்ற பெண்களை அவ்வப்போது சைட் அடிப்பாராம். ஆனால், இது சாண்ட்ராவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கனவே பல முறை வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் இந்த விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஆவேசமாகக் கத்தியுள்ளனர்.

சாண்ட்ரா: ஒரு கட்டத்தில் இதனால் ஆத்திரமடைந்த சாண்ட்ரா இது தொடர்பாகத் தனது காதலனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தனது காதலனின் கண்களை வெறி நாய்க்கடி ஊசியைக் கொண்டு சரமாரியாகக் குத்தியுள்ளார். மற்ற பெண்களை சைட் அடித்தார் என்பதற்காகக் காதலனின் கண்களையே இந்த பெண் தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த நாளில் இருவரும் இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது தான் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தனது காதலனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த அந்த பெண், அங்கிருந்த ஊசியைக் கொண்டு அவரது கண்களைக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த காதலன் அலறிய நிலையில், அந்த பெண் சத்தமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டராம்.

பகீர் சம்பவம்: இதையடுத்து மெல்லத் தட்டுத்தடுமாறி போலீசாருக்கு அந்த நபரே கால் செய்துள்ளார். தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்குப் போட வைத்திருந்த ரேபிஸ் ஊசியை எடுத்து கண்களில் குத்திவிட்டதாக போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அந்த நபரை மீட்ட போலீசார், உடனடியாக அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சாண்ட்டிராவை தேடிய போலீசார், அவர் அருகில் கார் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும், சாண்டிரா தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறார். தனது காதலன் கண்களில் காயம் ஏற்பட அவரே தான் காரணம் என்றும் தான் எதுவும் செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர் இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+