மலை போல் குவியும் ஆன்லைன் ஆர்டர்கள்.. வால்மார்ட் வெறிச்.. 1 லட்சம் பேரை பணிக்கு அமர்த்திய அமேசான்
வாஷிங்டன்: கொரோனா பீதியை தொடர்ந்து வழக்கமாக ஆன்லைன் செய்பவர்களைத் தாண்டியும் பலரும் ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு சென்றுவிட்டதால் அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனம் ஒரு லட்சம் பேரை பணிக்கு அமர்த்தியது.
கொரோனா விவகாரம் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்த அரக்கன் போல் உள்ளது. இந்த அரக்கனை சமாளிக்க முடியாமல் உலகமே திணறி வருகிறது.
இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு அறிவுரைகள் அந்தந்த நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

ஆர்டர்
முகமூடிகளை பயன்படுத்த வேண்டும். சானிட்டைசர் பயன்படுத்தி கை கழுவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கூறி வருகின்றன. இதனால் மக்கள் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கக் கூட வெளியே செல்வதில்லை. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பிரபல ஆன்லைன் தளங்களில் ஆர்டர் மக்கள் ஆர்டர் செய்து வருவதால் ஆங்காங்கே ஆர்டர் குவிகிறது. இதனால் வால்மார்ட் உள்ளிட்ட கடைகளில் வெறிச்சோடி காணப்படுகிறது.

பேக்கிங்
வழக்கமாக ஆன்லைன் ஷாப்பிங் பயன்படுத்துவோரை காட்டிலும் அமெரிக்காவில் அதன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு சானிட்டரி நாப்கின் வாங்கக் கூட மக்கள் வெளியே வர முடியாத சூழலால் ஆன்லைனில் வாங்குகின்றனர். இதனால் அமேசான் உள்ளிட்ட தளங்களில் ஆர்டர்கள் குவிந்து வருகிறது. ஆர்டரை எடுத்து பேக்கிங் பிரிவுகளுக்கு அனுப்பவும் ஆள் இல்லை.

வாடிக்கையாளர்
இதனால் ஆர்டர்கள் மலை போல் பெருகி வருகின்றன. வாடிக்கையாளர்களும் பொருட்கள் கிடைக்காமல் அமேசான் உள்ளிட்ட எண்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு வருகிறார்கள். இதனால் அமேசான் நிறுவனமே ஸ்தம்பித்து போயுள்ளது. வாடிக்கையாளர்களின் அர்ச்சனையை கேட்க முடியாமலும் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ளாமலும் அமேசான் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆன்லைன்
இதை சமாளிக்க ஒரு லட்சம் ஊழியர்களை புதிதாக வேலைக்கு பணியமர்த்த பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் முடிவெடுத்துள்ளது. டெலிவரிக்காகவே பெரும்பாலான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மணிக்கு 15 டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் மணிக்கு 17 டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது அமேசான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications