அணு ஆயுதங்களையும் வானிலேயே இடைமறித்து அழிக்க முடியுமா? பாதிப்பு எதுவும் ஏற்படுமா? இதோ விவரம்
வாஷிங்டன்: மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு சர்வதேச அளவில் போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளும் மல்லுகட்டுவதால் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. டிரோன்கள், ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் தொழில் நுட்பத்தை பல்வேறு நாடுகளும் வைத்துள்ளன. அதேவேளையில், அணு ஆயுதங்களையும் இப்படி வானிலேயே அழிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு என்பது காலம் காலமாக நீடித்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் போர் பதற்றம் என்பது கடந்த சில தசாப்தங்களாக இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோதலில் தொடங்கி, இஸ்ரேல்- ஹமாஸ் போர் என தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக மோதல் வெடித்து வருகிறது.

வான் பாதுகாப்பு அமைப்பு
தற்போது ஈரானும் இஸ்ரேலும் மல்லுக்கட்டி நிற்கின்றன. போரில் பெரும்பாலும் டிரோன்கள் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏவுகணைகள், டிரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக அழிக்கும் தொழில்நுட்பத்தையும் நாடுகள் கொண்டுள்ளன. குறிப்பாக இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை இதற்கு உதாரணமாக சொல்லலாம்..
இடைமறித்து அழிக்க முடியுமா?
அணு ஆயுதங்களை இந்த வான் பாதுகாப்பு அமைப்பால் தடுக்க முடியுமா? என்ற கேள்வி எழலாம்.. இது பற்றி அத்துறை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். உலகம் முழுவதும் சுமார் 12,100 அணு ஆயுதங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 88 சதவீத அணு ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் உள்ளன. பிரான்ஸ், சீனா, பிரிட்டன், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
அணு ஆயுதங்களை பொறுத்தவரை பேரழிவு ஏறபடுத்தகூடிய ஆயுதமாக பார்க்க முடிகிறது. அவை வெடிக்கும்போது பெரிய அளவில் அழிவு ஏற்படும். அணு குண்டுகள் அதிக வெப்பத்தையும், கதிரியக்கத்தையும் வெளியிடுவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவுகள் சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு அணு ஆயுதத்தால் ஒரு நகரத்தையே அழிக்க முடியும்.
மிகவும் சவாலான பணி
குண்டின் அளவைப் பொறுத்து, இதன் தாக்கம் 85 கி.மீ வரை உணரப்படலாம். இந்த தூரத்தில் இருப்பவர்கள் வெடிப்பை நேரடியாகப் பார்த்தால் தற்காலிகமாக பார்வை இழக்க நேரிடலாம். கதிரியக்கத்தின் காரணமாக உடனடியாக உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
அணு ஆயுதங்கள் ஏவப்படும் போது அதை தடுக்க முடியும். ஆனால், அது மிகவும் சவாலான பணி. அணு குண்டுகளை குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவுவதற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. 1960-களில், அணு ஆயுதப் போட்டி உச்சத்தில் இருந்தபோது, சோவியத் யூனியன் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கியது.
கதிரியக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள், அணு ஆயுத ஏவுகணைகளை இலக்கை அடைவதற்கு முன்பு இடைமறித்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, உள்வரும் அணு ஆயுத அச்சுறுத்தலைக் கண்டறிந்து, அதைத் தொடர்ந்து இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை ஏவுவதன் மூலம் செயல்படுகிறது. ஏவுகணையை அழிக்கும் பூஸ்டர் ராக்கெட்டை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது.
இதன் மூலம், ஏவுகணையுடன் மோதி அதை அழிக்கலாம் அல்லது வெடித்துச் சிதறும் போர்முனையைப் பயன்படுத்தி அணு வெடிப்பை ஏற்படுத்தாமல் ஏவுகணையின் ஆயுதத்தை அழிக்கலாம். இருப்பினும், இந்த முறையில் புளூட்டோனியம் அல்லது யுரேனியம் அப்பகுதியில் சிதறடிக்கப்பட்டு கதிரியக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், இது ஒரு நகரத்தை அழிப்பதை விட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும்.
எதிர்காலத்தில் சாத்தியப்படுத்த முடியும்
எனவே, அணு ஆயுதங்களை இடைமறித்து அழிப்பது கடினம் என்றாலும், சாத்தியமற்றது அல்ல. சரியான நேரத்தில் கண்டறிந்து, துல்லியமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்தினால் பேரழிவை தடுக்க முடியும்.
எனவே, சரியான நேரத்தில் கண்டுபிடித்து, துல்லியமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பேரழிவைத் தவிர்க்க முடியும். அணு ஆயுதங்களை இடைமறித்து அழிப்பது கடினம் என்றாலும், அது சாத்தியமற்றது அல்ல. தொழில்நுட்ப வளர்ச்சியினால் இதனை எதிர்காலத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
-
"அமெரிக்காவை ஓடவிட்டோம்.. இஸ்ரேலை வீழ்த்திவிட்டோம்.." விடிய விடிய கொண்டாடிய ஈரான் மக்கள் -
டிரம்பை ஏமாற்றும் ஈரான்? ஆங்கிலத்தில் ஒன்று, உள்ளூர் மொழியில் வேறு ஒன்று! வெளியான இருவேறு ரிப்போர்ட் -
"உங்கள் அதிகார வரம்பு இல்லை.." SEC முறைகேடு விவாகரத்தில்.. அமெரிக்க நீதிமன்றத்தை நாடிய அதானி -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்?












Click it and Unblock the Notifications