பெரிய மிஸ்டேக்.. பொய் சொல்லும் ஜஸ்டின் ட்ரூடோ? இந்தியாவுக்கு ஆதரவாக கனடாவை விளாசிய அமெரிக்கா
வாஷிங்டன்: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரிய தவறு செய்துவிட்டார். இந்த தவறை அவரால் திரும்ப பெற முடியாது என அமெரிக்கா பரபரப்பாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கனடாவில் இருந்து கொண்டு கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் செயல்பட்டு வந்தார். இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

இதுபற்றி கனடா அரசு விசாரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதாவது ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவின் ஏஜென்சி மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பகமான தகவல்கள் வந்திருப்பதாக கூறினார்.
இதனை இந்தியா உடனடியாக மறுத்தது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை கனடா நிறுத்த வேண்டும் என வார்னிங் கொடுத்தது. அதோடு தற்போது இருநாடுகள் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. இதனால் இருநாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து இந்தியாவை குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் தான் இந்தியா-கனடா இடையேயான மோதல் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பென்டகர் அதிகாரியான மைக்கேல் ரூபின் தற்போது அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்ட்டியூட் மூத்த உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் தான் மைக்கேல் ரூபினிடம் இந்தியா-கனடா இடையேயான பிரச்சனை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு மைக்கேல் ரூபின் கூறியதாவது:
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மிகப்பெரிய மிஸ்டேக் செய்து விட்டார். ஜஸ்டின் ட்ரூடோ பின்வாங்க முடியாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தற்போது அவர் முன்பு 2 வாய்ப்பு உள்ளது. ஒன்று அவர் கூறிய குற்றச்சாட்டு மூலம் தன்னைத்தானே ஜஸ்டின் ட்ரூடோ சுட்டு கொண்டதை ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியட வேண்டும். மேலும் தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது ஏன் என ஜஸ்டின் ட்ரூடோ விளக்க வேண்டும்.

அதோடு இந்த விஷயத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். ஒசாமா பின்லேடன் ஒரு கட்டுமான என்ஜினீயர். ஆனால் அவர் பல தாக்குதல்களை நடத்தினார். இதனால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வெறுமனே பிளம்பர் என்பதை மட்டுமே கூறிவிட முடியாது. மேலும் ஜஸ்டின் ட்ரூடோவின் நிலைப்பாட்டில் கனடாவின் நட்பு நாடுகள் ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்பது பற்றிய கவலையின்றி அவர் உள்ளார்.
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி இஸ்தான்புல்லில் கொல்லப்பட்டபோது துருக்கி உளவுத்துறை முக்கிய தகவலை வெளியிட்டது. இது தான் சவூதி அரேபியாவுக்கு எதிராக திரும்பியது. ஆனால் ஜஸ்டின் ட்ரூடோவால் எந்த ஆதாரங்களையும் வெளியிட முடியவில்லை. என்னை நம்புங்கள்.. என்னை நம்புங்கள் என கூறுகிறார். இதனால் அவரை யாராலும் நம்ப முடியாது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications