கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 80 பேரின் கதி என்ன?
வாஷிங்டன்: கொலம்பியாவில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அந்த விமானத்தி பயணித்த 80 பேரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கொலம்பியா பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
இன்று ஏற்பட்ட ராணுவ விமான விபத்தில் சுமார் 80 படைவீரர்கள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் 80 பேருடன் சென்ற ரணுவ விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. சி130 ஹெர்குலஸ் ரக விமானத்தில், 80 ராணுவ வீரர்கள் பயணீத்துள்ளனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது.
கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூரெட்டா லெகிசமோ என்ற நகரில் இருந்து விமானம் புறப்பட்டுள்ளது. ஈகுவடாரை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரத்தில் இருந்து விமானம் புறப்பட்டதில் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் விழுந்துள்ளது விமானம் விழுந்த இடத்தில் கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 80 வீரர்களும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த வகை விமானம் பொதுவாக சுமார் 100 படைவீரர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இராணுவப்படைகள் ஏற்கனவே சம்பவ இடத்துக்கு சென்றுள்ளன. ஆனால், உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கையும், விபத்தின் காரணமும் இன்னும் உறுதியாகவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கொலம்பியா பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications