மலேரியா மாத்திரை.. நாம கூட அனுப்பினோமே.. அதுதான் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணமாம்
வாஷிங்டன்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின்.. இந்த மருந்தின் பெயர் நினைவு இருக்கிறதா. மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும், இதைத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்த உதவும் என நம்பினார், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
Recommended Video
அமெரிக்காவுக்கு இதை இந்தியா தராவிட்டால், பதிலடி தரப்படும் என்று, இல்லாத மீசையை முறுக்கினார். இந்தியாவும், அமெரிக்கா மட்டுமல்ல மேலும் பல நாடுகளுக்கும் அவர்கள் கோரிக்கையை ஏற்று அனுப்பி வைத்தது.
நம்ம நாட்டில் சிலரோ, மெடிக்கலுக்கு ஓடிச் சென்று, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை வாங்கி வைத்துக் கொண்டனர். சர்வதேச அளவில் திடீரென ஃபேமசான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால்தான், அமெரிக்காவில் பலர் பலியாகிவிட்டனர் என்கிறது புதிய ஆய்வு.

ஆதாரம் இல்லை
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினுக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது அந்த ஆய்வு முடிவு., ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு, அஜித்ரோமைசினுடன் அல்லது இல்லாமல், பலனை கொடுப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்கிறது அந்த கட்டுரை.

இறப்பு விகிதம்
"ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மட்டுமே கொடுத்து சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவு இறந்துள்ளனர்." என்று தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த அறிக்கைகள் குறித்து தனக்கு இதுவரை தெரியவில்லை என்றும், அதுபற்றி ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு
30 மில்லியனுக்கும் அதிகமான அளவுகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா சேமித்து வைத்துள்ளது, அவற்றில் ஒரு பெரிய பகுதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதுதான். காங்கிரஸ் கட்சி பிரமுகர் பில் பாஸ்கிரெல் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதாரம் தேவை
"இன்று நாம் அனுபவிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமும், மருத்துவர்களும் நம் முன்னோர்கள் செய்த கடினமான ஆய்வு பணிகளின் பலன். இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம்தான். ஆனால், டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கப்படாத நிரூபிக்கப்பட்ட அதிசய சிகிச்சைகளை முன்வைப்பது இந்த பிரச்சினையிலிருந்து நம்மை வெளிக்கொண்டு வராது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின், சிகிச்சையை ட்ரம்ப் அடிக்கடி கூறுவது மிகவும் பொறுப்பற்றது. தேவையற்ற வேதனையையும் துன்பத்தையும் ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications