மோசமான சாதனை.. அமெரிக்காவில் கொரோனா தொற்று 30 லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டி உள்ளது,
உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 3,009,611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்று நோயால் 30 லட்சம் பேர் பாதிப்பு என்ற மோசமான சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 131,514 பேர் உயிரிழந்துள்ளனர். நள்ளிரவு நிலவரப்படி அமெரிக்கவில் புதிதாக 33420 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் 472 பேர் இதுவரை கொரோனாவால் இறந்துள்ளனர்,
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13 லட்சத்து 73 ஆயிரத்து 861 பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலையில் அமெரிக்காவில் 16 லட்சத்து 22 ஆயிரத்து 199 ஆக்டிவ் நோயாளிகள் அமெரிக்காவில் உள்ளனர். இதில் 15 ஆயிரத்து 387 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கேரளாவில் முதல் வெடிப்பு.. திருவனந்தபுரம் பூந்துராவில் 'சூப்பர் ஸ்ப்ரெட்'.. கமாண்டோக்கள் குவிப்பு
Recommended Video
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 10 லட்சம் பேருக்கு 9457 என்கிற அளவில் உள்ளது. இறப்பு என்பது 10 லட்சம் பேருக்கு 406 என்ற அளவில் உள்ளது இது வரை அமெரிக்காவில் 39,125,893 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.