"751 கோடி.." அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடாது! பைடனை மிரட்டும் தொழிலதிபர்கள்! என்ன மேட்டர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பைடன் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக நிதி கொடுப்போர் பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் நிதி தர மாட்டோம் என செக் வைக்க ஆரம்பித்துள்ளனர். இப்படியே சுமார் 90 மில்லியன் டாலர், அதாவது 751 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இதனால் அவர்கள் மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அப்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது தான் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிருப்தி: இது ஒரு பக்கம் இருக்கக் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் கடும் போட்டி இருக்கும் என்றே கூறுகிறது. குறிப்பாக பைடன் மீதான அதிருப்தி சற்று அதிகமாகவே இருக்கிறது. 81 வயதாகும் பைடன் அமெரிக்காவை வழிநடத்தும் அளவுக்கு ஃபிட்டாக இல்லை என்பதே பலரது விமர்சனமாக இருக்கிறது. அதிலும் கடந்த மாதம் டிரம்ப்- பைடன் இடையே நடந்த விவாதம் பைடன் இமேஜை முற்றிலுமாக காலி செய்துவிட்டது.
கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிர்வாகம் செய்த நடவடிக்கைகளை முன்வைக்க பைடன் தவறிவிட்டார். பைடன் அந்த விவாதத்தில் திக்கித் திணற.. டிரம்ப் எகிறி அடித்தார். இந்த விவாதத்தில் முழுக்க முழுக்க டிரம்ப் தான் ஆதிக்கம் செலுத்தினார். இந்த விவாதத்திற்குப் பின்னரே பைடன் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தனர். சொந்த கட்சியினரே பைடன் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர்.
அதிகரிக்கும் எதிர்ப்பு: பைடன் இதுவரை மிகச் சிறந்த அதிபராகச் செயல்பட்டுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால், அவர் இந்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் வெல்வது கடினம் என்பதே ஜனநாயக கட்சியினரின் கருத்தாக இருக்கிறது. டிரம்ப் மீண்டும் அதிபரானார் அது அமெரிக்காவுக்குப் பேரழிவைத் தரும் எனச் சொல்லும் அவர்கள், அதிபர் தேர்தலில் கடும் போட்டி தர வேண்டும் என்றால் பைடன் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்றே பலரும் வலியுறுத்துகிறார்கள்.
பைடனுக்கு பதிலாக தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர். கருத்துக்கணிப்புகளிலும் கூட கமலா ஹாரிஸ் களமிறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே பைடனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகவில்லை என்றால் நிதி தர மாட்டோம் என்று ஜனநாயக கட்சி ஆதரவு தொழிலதிபர்கள் செக் வைக்கவும் தொடங்கியுள்ளனர்.
தொழிலதிபர்கள்: அமெரிக்காவைப் பொறுத்தவரைப் பிரச்சாரம் செய்ய மிக அதிகமாகச் செலவாகும். இதனால் அனைத்து தலைவர்களும் நிதி திரட்டியே பிரச்சாரம் செய்வார்கள். டிரம்ப் உள்ளிட்ட சில தொழிலதிபர்கள் மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், பெரும்பாலான வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய நன்கொடை முக்கியம். பைடனும் நன்கொடையையே சார்ந்து இருக்கிறார். ஆனால், இப்போது அவர் அதிபர் தேர்தலில் விலக வேண்டும் என்று கூறி நிதியை முடக்கியுள்ளனர்.
முடக்கம்: முதற்கட்டமாக சுமார் 90 மில்லியன் டாலர், அதாவது 751 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பைடனுக்கு பதிலாக வேறு யாராவது போட்டியிட்டால் மட்டுமே நிதி தருவோம் என அவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். பைடன் விலகவில்லை என்றால் முழுமையாக நிதியை முடக்குவோம் என்று அவர்கள் செக் வைத்துள்ளனர்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications