இறந்துவிட்டார் மகிழ்ச்சியாக இருக்கு.. எஃப்பிஐ முன்னாள் இயக்குநர் மறைவுக்கு டிரம்ப் கொடுத்த ரியாக்ஷன்
வாஷிங்டன்: அமெரிக்க எஃப்.பி.ஐயின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் காலாமானார். அவரது மரணம் குறித்து தனது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கும் டிரம்ப், முல்லர் மரணம் அடைந்தது மகிழ்ச்சியை தருவதாக கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யா தனக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக முல்லர் விசாரித்ததால் அவர் மீதான வெறுப்பை உமிழ்ந்து வந்த டிரம்ப், மரணம் அடைந்த பிறகும் இப்படியான பதிவை போட்டு இருக்கிறார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பிஐ. இதன் தலைவராக இருந்தவர் ராபர்ட் முல்லர் III. அமெரிக்காவின் முதன்மையான விசாரணை அமைப்பாக இருந்த எஃப்.பிஐயை, இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகாக பயங்கரவாத எதிர்ப்பு பிரிவாகவும் இவரே மாற்றினார்.

நல்லது, அவர் இறந்துவிட்டார்
அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவியதாக எழுந்த குற்றாச்சாட்டு தொடர்பாகவும் இவரே விசாரணை மேற்கொண்டார். 81 வயதான ராபர்ட் முல்லர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்க கூடிய பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.
டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- ராபர்ட் முல்லர் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்தார். நல்லது, அவர் இறந்துவிட்டார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பாவி மக்களை இனி அவரால் காயப்படுத்த முடியாது" என்று பதிவிட்டுள்ளார். டிரம்பின் இந்த கருத்து தொடர்பாக எஃப்.பி.ஐ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு
எஃப்.பி.ஐ வரலாற்றில் ஜே. எட்கர் ஹூவருக்கு அடுத்ததாக நீண்ட காலம் பதவி வகித்த இயக்குநராக இருந்த முல்லர், தனது 10 ஆண்டு கால அவகாசம் முடிந்த பின்னரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பாரக் ஒபாமாவின் வேண்டுகோளை ஏற்று 2013 வரை அந்த பதவியில் தொடர்ந்தார். தனியார் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டிரம்ப்-ரஷ்யா தொடர்பான விசாரணைக்கு சிறப்பு வழக்கறிஞராக மீண்டும் பொதுப் பணியாற்றுமாறு இவருக்கு அழைப்பு வந்தது.
அப்போதைய அமெரிக்க துணை சட்டத்துறைத் தலைவர் ராட் ரோசன்ஸ்டீன் கேட்டுக்கொண்டதையடுத்து, இந்த பொறுப்பை முல்லர் ஏற்றார். அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்புக்கு சாதகம் ஏற்படுத்தும் விதமாக ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராபர்ட் முல்லர் விசாரணை நடத்தினார்.
448 பக்க அறிக்கை
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, டிரம்பின் தேர்தல் பிரச்சாரத் தலைவர் மற்றும் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட டிரம்புக்கு நெருக்கமான ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அவரது 448 பக்க அறிக்கையில், டிரம்ப் பிரச்சார குழுவுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க தொடர்புகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டாலும், குற்றச் சதி நடந்தது என்று அவர் கூறவில்லை.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்ததால் முல்லர் மீது தனது கோபத்தை தொடர்ந்து கொட்டி வந்த டிரம்ப், தனது இரண்டாவது ஆட்சி காலம் வரையிலும் தொடர்ந்தார். இந்த நிலையில், முல்லர் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் டிரம்ப் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications