'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன்
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாக போனால், ஓமன் நாட்டையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் தனது நட்பு நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஓமனுக்கே டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓமனை கடுமையாக எச்சரித்த டிரம்ப்
ஓமன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த நாடு தகர்க்கப்படும். ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்பாட்டில் எடுக்க அனுமதிக்க முடியாது. அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். இது சர்வதேச கடல் பகுதி. ஓமன் மற்ற நாடுகளைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அதை நாங்கள் அழித்து விட வேண்டிய நிலை ஏற்படும். அதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். எல்லாம் சுமூகமாக இருக்கும்" என்று கூறினார். ஈரான் என்று கூறுவதற்கு பதிலாக ஓமன் என தவறுதலாக டிரம்ப் குறிப்பிட்டாரா? அல்லது.. ஒமனை குறிப்பிட்டே சொன்னாரா? என்பது பற்றி வெள்ளை மாளிகை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக ஓமன் உள்ளது.
ஓமன் மீது ஈரான் தாக்கிய நிலையில், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஓமனும் ஈடுபட்டு இருந்தது. இந்த சூழலில், ஓமன் நாட்டிற்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருப்பது மத்திய கிழக்கு நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிய காட்சிகளை சிறிது நேரத்தில் அந்நாட்டு வெளியுறவு துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது.
வீடியோவில் குறிப்பிட்டது என்ன?
அந்த வீடியோவிலும் எந்த திருத்தமும் செய்யாமல் ஓமன் என்று குறிப்பிட்டதே ஒளிபரப்பானது. எனவே, டிரம்ப் திட்டமிட்டே ஓமனை எச்சரித்தது உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போர் வெடித்தது. இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்த ஈரான், அந்த வழியாக போக்குவரத்தை முடக்கியது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா - ஈரான் போரின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், கடந்த ஏப்.9 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துக்கொண்டே செல்கிறது.
ஈரான் மீது வான்வழி தாக்குதல்
இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்தம் இறுதி வடிவத்தை எட்டியதாக தகவல்கள் வெளியானது. எனினும், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவதால் ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் இழுபறி நீடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில்தான், புதிய வான்வழித் தாக்குதலை அமெரிக்கா இன்று காலை அரங்கேற்றியது.
ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில், ஹார்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில், அமெரிக்க ராணுவம் அதிகாலையில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒருபுறம் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!














Click it and Unblock the Notifications