பேரழிவு தொடங்கிடுச்சு.. 2050ல் மொத்தமாக அழிய போகும் உலகம்? இந்த தப்புக்கும் நாம் தான் காரணமாம்!
வாஷிங்டன்: இப்போதெல்லாம் புதிது புதிதாக நாம் கனவில் கூட எதிர்பார்க்காத நோய்ப் பாதிப்புகள் திடீரென பரவி வருகிறது. இதுபோல ஏற்படும் நோய்ப் பாதிப்புகள் உலகையே மொத்தமாகப் புரட்டிப் போடுவதாக இருக்கிறது. இதற்கிடையே இன்னும் 25 ஆண்டுகளில், அதாவது 2050ஆம் ஆண்டிற்குள் சுமார் 4 கோடி பேர் சூப்பர்பக்ஸ் காரணமாக உயிரிழப்பார்கள் என்ற ஷாக் தகவல் தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா நம்மை எந்தளவுக்குப் படாய் படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். சும்மா பக்கத்து வீதிக்குச் சென்றாலே மாஸ்க் போட வேண்டிய சூழலே இருந்தது.

4 கோடி உயிரிழப்புகள்: அதில் இருந்து நாம் இப்போது தான் மெல்ல மீண்டு வந்துள்ளது. இதற்கிடையே 2050ம் ஆண்டுகள் சுமார் 4 கோடி பேர் சூப்பர்பக்ஸ் காரணமாக உயிரிழப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மிகப் பெரிய இழப்பு ஏற்படக்கூடும் என்பதால் உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சரி இந்த சூப்பர்பக்ஸ் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா.. ஆன்டிபயாடிக்ஸ் போட்டும் பலன் தராத பாக்டீரியா அல்லது நோய்க்கிருமிகளைத் தான் இங்கே சூப்பர்பக்ஸ் என்று அழைக்கிறோம். இவை ஆன்டிபயாடிக்ஸ் போட்டாலும் உயிரிழக்காது என்பதால் இதற்குச் சிகிச்சை அளிப்பது கடினமான விஷயம். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே இப்போதே பார்க்கப்படுகிறது.
சூப்பர் பக்ஸ்: இது எப்போதோ நடக்கப் போகும் பாதிப்பு எல்லாம் இல்லை. ஏற்கனவே இந்த சூப்பர்பக்ஸ் காரணமாகப் பேரழிவு தொடங்கிவிட்டது. கடந்த 1990 முதல் 2021 வரை மட்டும் சுமார் 10 லட்சம் பேர் சூப்பர்பக்ஸால் உயிரிழந்துள்ளனர். ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் என்று அழைக்கப்படும் சூப்பர்பக்ஸ்களுக்கு சிகிச்சை தருவது ரொம்பவே கடினமான பணியாகும்.
இதற்கு முன்பு வரை கடந்த 30 ஆண்டுகள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சூப்பர்பக்ஸ்களால் பாதிக்கப்படுவது குறைவாகவே இருந்தது. தொற்று நோய்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்குக் காரணம். அதேநேரம் இப்போது குழந்தைகளிடையேயும் இது அதிகரித்துள்ளதாம். இதனால் சிகிச்சை அளிப்பது கடினமானதாக மாறியுள்ளது.
யாருக்குப் பாதிப்பு அதிகம்: வயதான மக்கள் எளிதாகத் தொற்று நோயால் பாதிக்கப்படுவதால்.. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் சூப்பர்பக்ஸால் உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக MRSA எனப்படும் ஆன்ட்பயாடிக்கிற்கு பலன் தராத பாக்டீரியாக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது கடந்த 30 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதே நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உயிரிழப்புகள் 67 சதவீதம் அதிகரிக்கும். இதனால் 2050ம் ஆண்டில் இந்த சூப்பர்பக்ஸ் காரணமாக ஏற்படும் நேரடி உயிரிழப்புகள் 40 லட்சத்தை எட்டும் என்றும் இது மொத்தம் 1.69 கோடி உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது மிக பெரிய அச்சுறுத்தல் என்பதை உணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் 2050க்குள் 9.2 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 22 நோய்க்கிருமிகள், 84 மருந்துகள், 11 தொற்று நோய்களை வைத்து ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தப்பை பண்ணதீங்க: சூப்பர்பக்ஸ் எனப்படும் ஆன்டிபயாடிக்ஸுக்கு பயன் தராத பாக்டீரியாக்கள் உருவாவது ஒரு இயற்கையான விஷயம். ஆனால், இப்போது நாம் ஆன்டிபயாடிக்ஸ்களை அதிகம் பயன்படுத்துவதால், சூப்பர்பக்ஸ்கள் உருவாவது அதிகரித்துவிட்டதாம். தேவையில்லாமல் ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிப்பதே இதற்குத் தான். இது முக்கிய பிரச்சினை என்பதை நாம் உணராமல் விட்டால் பேரழிவு நிச்சயம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே, தப்பித் தவறியும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஆன்டிபயாடிக்ஸ்களை எடுத்துக்காதீங்க.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications