நினைத்தாலே போதும் ட்வீட்கள் விழும்! "மூளையில் சிப்" வைத்து சாதித்த எலான் மஸ்க்! இது எப்படி சாத்தியம்
வாஷிங்டன்: எலான் மஸ்கின் நியூரோலிங் மூலம் மூளையில் சிப் வைக்கப்பட்ட ஒருவர் வெறும் நினைத்ததன் மூலமே ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக அவரது மின்சார கார் வாகனமான டெஸ்லா, ராக்கெட் அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் உலகளவில் புகழ் பெற்றவை. அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கி இருந்தார்.

இதற்கிடையே எலான் மஸ்கின் மற்றொரு முக்கிய நிறுவனமான நியூராலிங்க் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பு இந்த நியூராலிங்க் என்றால் என்ன.. இந்த நிறுவனம் என்ன செய்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நியூரோலிங்க்: எலான் மஸ்க் கைவசம் வைத்திருக்கும் பல நிறுவனங்களில் இந்த நியூரோலிங்க் நிறுவனமும் ஒன்று. மனிதர்கள் மூளையில் சிப் பொருத்தி சோதனை செய்வதே இதன் நோக்கம். முடக்குவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுச் செயல்பட முடியாமல் இருப்போரின் மூளையில் சிப் வைப்பார்கள்.
அவர்கள் நினைப்பதன் மூலமாகவே விரும்பிய செயல்களைச் செய்வதே இதன் நோக்கமாகும். அவர்கள் நினைப்பதன் மூலமாகவே மின்விளக்கை ஆன் செய்யவோ அல்லது அணைக்கவோ கூட முடியும். அதாவது மனித மூளையே கம்பியூட்டர் உடன் இணைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த நியூராலிங்க்கில் முதல் நோயாளி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நோலண்ட் அர்பாக். இவருக்குச் சமீபத்தில் தான் ஆப்ரேஷன் செய்யப்பட்டு மூளையில் சிப் வைக்கப்பட்டது. இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக இருந்த நிலையில், அதன் பிறகு நினைப்பதன் மூலமாகவே இவரால் பல செயல்களைச் செய்ய முடிகிறதாம். இவர் கலக்கலாக செஸ் ஆடும் வீடியோவும் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகி இருந்தது.
முதல் ட்வீட்: இதற்கிடையே இவர் வெறுமன நினைப்பதன் மூலம் இவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளார். 29 வயதான அர்பாக். நியூரோலிங்க சைபர்நெட்டிக் அமைப்பின் மூலம் தனது எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி ட்வீட் செய்து இருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் ஒரு ஏஐ போட் என நினைத்து ட்விட்டர் என்னைத் தடைசெய்தனர், ஆனால், நான் மனிதன் தான் என்பதால் எலான் மஸ்க் இந்த தளத்தில் என்னை மீண்டும் அனுமதித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இதற்குப் பலரும் பதில் அளித்த நிலையில், எலான் மஸ்க்கும் கூட இதற்கு ரியாக்ட் செய்துள்ளார். "நியூராலிங்க் டெலிபதி சாதனத்தைப் பயன்படுத்தி நினைத்ததாலே மட்டுமே பதிவிடப்பட்ட முதல் ட்வீட்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
யார் இவர்: 29 வயதான அர்பாக், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டைவிங் செய்து போது விபத்தில் சிக்கினார். அதில் அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரால் மொத்தமாகச் செயல்பட முடியாமல் போனது. பல கட்ட சோதனைக்குப் பிறகு சமீபத்தில் தான் அவருக்கு மூளையில் சிப் பொருத்தும் ஆப்ரேஷன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்த அர்பாக், இருப்பினும் தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது வரை நியூரோலிங்க் சோதனைகள் திருப்திகரமான முடிவுகளையே கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவன ஆய்வாளர்கள், வரும் காலத்தில் மேலும் பலருக்கு இதுபோன்ற சிகிச்சையை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இது சிக்கலான நரம்பியல் நிலைமைகளைச் சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications