Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைவலியால் துடித்த இளம்பெண்! மருத்துவர்கள் சிகிச்சையால் கண், முகம் வீங்கி, வாய் திறக்க முடியாத சோகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 3 தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டதால் அவரது உடல்நிலை மோசமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபுளோரிடாவை சேர்ந்தவர் அலெக்சிஸ் லோரன்ஸ் என்ற 23 வயது பெண். இவருக்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டெட்டனஸ், நிமோக்காக்கல், மூளை காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை செப்டம்பர் 17ஆம் தேதி ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளது.

international florida

இவர் தடுப்பூசிகளை போட்ட 10 நிமிடங்கள் கழித்து அவரது உடல் நிலையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவருடைய கண்கள் வீங்க ஆரம்பித்தன. பிறகு பார்வை பறிபோனது. இதனால் பதறிய அந்த பெண்ணால் எதையும் சொல்ல முடியாத அளவுக்கு வாய் திறக்க முடியவில்லை.

தோலின் நிறம் மாறியுள்ளது. பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாமல் போய்விட்டார். ரத்தத்திலும் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அந்த பெண்ணிடம் மருத்துவக் காப்பீடு இல்லாததால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாற்றுச் சிகிச்சை தரப்படுகிறது.

தான் பாதிக்கப்பட்டது குறித்து அந்த பெண் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அந்த பெண் வீங்கிய கண்களுடன், கருப்பு ஊதா நிறத்தில் கழுத்து, நெற்றி பகுதிகளில் மாறிய தோலுடன், உடல் முழுவதும் சிராய்ப்புடன், முடிகள் உடைந்து காணப்படுகிறார்.

அந்த பெண் கூறுகையில், எனக்கு தடுப்பூசி போடும் போது மருத்துவமனை நிர்வாகம் எதையோ செய்துவிட்டதால்தான் என் முகம் இப்படி மாறிவிட்டது. என் கழுத்தை பாருங்கள், என் முகம், நெற்றியை பாருங்கள். நான் இப்போது பேசுவதற்கு காரணம் எனக்கு நடந்தது யாருக்கும் நடந்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான்.

நான் உண்மையில் பயந்துவிட்டேன். என் உடலில் எல்லா இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவ உலகமே என் நிலையை பார்க்க வேண்டும். நான் தடுப்பூசி போட்ட மருத்துவமனை என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளது. நிறைய மருந்துகளை அவர்கள் ஏற்றினர். நான் மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம்தான் இவர் அரிதான ரத்த குறைப்பாடு நோயால் பாதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தனது உடல்நிலையை தானே சரி செய்துக் கொள்ள முயற்சித்தார். அவர் எந்த சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் திடீரென அவருக்கு தீராத தலைவலி வந்துவிட்டது. இதற்கு சிகிச்சை எடுக்க கலிபோர்னியா மருத்துவமனைக்கு சென்ற போதுதான் மருத்துவர்கள், அவர் தடுப்பூசிகளை போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

முதலில் அந்த பெண் தனது மத காரணங்களை கூறி மறுத்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் தன்னை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதாக தெரிவிக்கிறார்கள். அந்த மருத்துவமனை சட்டபடி அவர் இதுவரை செலுத்திக் கொள்ளாத தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால்தான் சிகிச்சையே தருவார்களாம். இந்த 3 ஊசிகளையும் அவர் குழந்தையிலிருந்தே போட்டுக் கொள்ளவில்லையாம்.

அந்த பெண் ஊசி போட்டுக் கொண்டதும் அவருடைய கண்கள் எரிந்து உடலில் அரிப்பு ஏற்படத் தொடங்கியது. அவரது கழுத்தை கீழே இறக்க முடியவில்லை. வலியால் கதறுகிறார். தலை வலிக்கு வந்த அந்த பெண்ணுக்கு மருத்துவமனை நிர்வாகம் தீராத வலியை கொடுத்துவிட்டது.

பொதுவாக சளி, காய்ச்சல் இருந்தாலே மருத்துவர்கள் தடுப்பூசிகளை போட மாட்டார்கள். ஆனால் இந்த பெண்ணுக்கு எப்படித்தான் 3 தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் போட்டார்கள் என தெரியவில்லை. மருத்துவர்கள் குழந்தைகளுக்கு போடும் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய சிறிய டோஸ்களை போடுவர். ஆனால் இவர்கள் மொத்த டோஸையும் அந்த பெண்ணுக்கு செலுத்தி விட்டார்களோ என சந்தேகம் எழுகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+