பெற்றோர் கொலை! பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமியை விடுவித்த ஹமாஸ்..சூளுரைத்த பைடன்
வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமி இன்று விடுவிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை முன்னெடுத்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், காசா மீது தாக்குதலை நடத்த தொடங்கியது. முன்னதாக இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதில் சுமார் 1,200 பேர் பலியாகினர். பின்னர் 250-க்கும் அதிகமானோரை துப்பாக்கி முனையில் கடத்தி காசா பகுதிக்கு இழுத்து சென்றனர். இதில் வெளிநாட்டவர்களும் அடங்குவர். இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இஸ்ரேலின் மும்முனை தாக்குதலில் காசா நகரம் நிலைகுலைந்துள்ளது. இதற்கிடையே, பிணைகைதிகளை விடுவிக்கவும், பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் தற்காலிகமாக போரை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.
ஜோ பைடன் பேட்டி: இதன்படி, கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தம் செய்தது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் 50 பணய கைதிகளை விடுவிக்கவும், அதற்கு ஈடாக 4 நாட்களுக்கு போரை நிறுத்தவும் உடன்பாடு ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்து வருகிறது. அந்த வகையில், இன்று 3 வெளிநாட்டவர்கள் மற்றும் 14 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது.
ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமி பத்திரமாக விடுவிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இந்த தகவலை தெரிவித்தார். ஜோ பைடன் கூறுகையில், " 4-வயது சிறுமி அபிகெய்ல் தற்போது விடுக்கப்பட்டு இருக்கிறார்.
பெற்றோரை இழந்த சிறுமி: இஸ்ரேலில் இருக்கிறார். போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இன்று 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது" என்றார். மேலும் அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்தார். விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களை இஸ்ரேல் வெளியிட்டதையடுத்து அவசர அவசரமாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் இந்த தகவலை வெளியிட்டார். சிறுமி பயங்கர அதிர்ச்சியில் இருப்பதாகவும் ஜோ பைடன் கூறினார்.
இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி விட்டு தரைவழியாகவும் புகுந்த ஹமாஸ் இயக்கத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடும் நடத்தினர். கடந்த மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில் 4-வயது சிறுமியின் பெற்றோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரேலில் இருக்கும் சிறுமி விரைவில் அமெரிக்கா அழைத்து வரப்படுவார் என்றும் தெரிகிறது.
-
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
"நாங்க ஷாக் ஆயிட்டோம்!".. உதவி கேட்டு கதறும் டிரம்ப்.. ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
ஈரான் உளவு துறை மாஸ்டர் மைண்ட் காலி.. முதுகை உடைத்த இஸ்ரேல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு -
"ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!" லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான் -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications