“சொந்த மக்கள் மீதே குண்டு வீச்சு!” ஐநா கூட்டத்தில்.. பாகிஸ்தானை ரவுண்டு கட்டிய இந்தியா
வாஷிங்டன்: பாகிஸ்தானில் சமீப காலங்களாக தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தங்களது சொந்த மக்களையே பாகிஸ்தான் கொல்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானை இந்தியா சரமாரியாக சாடியுள்ளது.
நேற்று ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

கூட்டத்தில், பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்திய தூதர் தியாகி கடுமையாக கண்டித்துள்ளார். கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்கள் மீது குண்டு வீசியதை சுட்டிக்காட்டிய தியாகி, இந்த சர்வதேச மேடையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துவதாக சாடியுள்ளார்.
தியாகி பேசியதாவது, "எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க விரும்புவதற்குப் பதிலாக, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளை விட்டு வெளியேறி, அவசர சிகிச்சையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுங்கள். ராணுவ ஆதிக்கத்தால் நசுக்கப்படும் அரசியலமைப்பை சீரமைக்கவும், மனித உரிமை மீறல்களால் கறைபடிந்த உங்கள் நிலையையும் சரி செய்ய வேண்டும். ஒருவேளை பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதிலிருந்தும், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதிலிருந்தும், சொந்த மக்கள் மீது குண்டு வீசுவதில் இருந்தும் ஓய்வு கிடைத்தால் இதைச் செய்யலாம்," என்று தியாகி விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் விமானப்படை, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், தங்கள் சொந்த மக்கள் மீது குண்டு வீசிய ஒரு நாளுக்குப் பிறகு இந்தியாவின் இந்த கண்டனம் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் விமானப்படை சீன தயாரிப்பான ஜே-17 போர் விமானங்களை பயன்படுத்தி, எட்டு சீன தயாரிப்பு எல்எஸ்-6 வெடிகுண்டுகளை அதிகாலை 2 மணியளவில், மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது கிராமத்தில் வீசியது.
இந்த சம்பவம், ஏற்கனவே சமீப காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களால் பதற்றத்தில் இருந்த உள்ளூர் சமூகங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. கடந்த வாரம், மாகாணத்தின் சுவாட் பள்ளத்தாக்கில் உள்ள மிங்கோரா நகரில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, அமைதியை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு அமைப்புகளையும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications