இந்தியாவில் காற்று மாசு எவ்வளவு இருக்கு பாருங்க.. மீண்டும் கேவலப்படுத்திப் பேசிய டிரம்ப்!
வாஷிங்டன்: இந்தியாவில் காற்று மாசு ரொம்ப அதிகம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது வாத நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே இன்று டென்னசிலுள்ள நாஷ்வில்லி பல்கலைக்கழகத்தில், நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சர்வதேச விவகாரங்கள், கொரோனா வைரஸ் நோய் பரவல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர்.

இந்தியாவை பாருங்கள்
டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது பற்றியும் அப்போது விவாதம் செய்யப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது: சீனாவைப் பாருங்கள் எவ்வளவு தூய்மையற்ற நாடு. ரஷ்யாவை பாருங்கள், இந்தியாவை பாருங்கள். அவர்களின் காற்று மிகவும் மாசு அடைந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக டிரம்ப்
ஆனால் அமெரிக்காவுக்கு தான் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. எனவே தான் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவை நான் எடுத்தேன். நமது டிரில்லியன் கணக்கான பணம் பயன்படுத்தப்பட்ட போதிலும் நம்மை வேறு மாதிரியாகத்தான் நடத்தினார்கள் என்று தெரிவித்தார். கடந்த முறை நடந்த அதிபர் டிபேட் நிகழ்ச்சியில், இந்தியாவில், சீனாவில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார் ட்ரம்ப். இப்போது மறுபடியும் இந்தியாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

வேலை வாய்ப்பு
மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கர்களின் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நான் தியாகம் செய்ய மாட்டேன். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் காரணமாக அமெரிக்காவில் பல தொழில் நிறுவனங்களால் தொழில் துவங்க முடியவில்லை. ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் அமெரிக்காவில் அதிகமாக தொழில் துவங்கப்படும். அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நட்பு நாடுதானே
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை நியாயம் கற்பிப்பதற்காக டிரம்ப் இவ்வாறு பேசினாலும், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை அவர் ஒப்பீடு செய்து இருக்கலாமே தவிர, நட்பு நாடான இந்தியாவை அவர் வம்புக்கு இழுப்பதை இந்திய சமூகம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜோ பிடனுக்கு ஆதரவு
ஏற்கனவே எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளில் அமெரிக்க வாழ் இந்திய சமூகம் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரியவந்தது. ஏனெனில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் காற்று மாசு அடைந்துள்ளதாக வம்பு செய்துள்ளார்.

காற்று மாசு
2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி உலகத்திலேயே அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. சீனா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் அமெரிக்கா, பிறகு ஐரோப்பிய யூனியன் என இவைதான் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications