பரஸ்பர வரி ரத்து.. ரஷ்யாவிடமிருந்து மீண்டும் எண்ணெய்யை வாங்குமா இந்தியா? வெளியான தகவல்!
வாஷிங்டன்: டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது போட்ட பரஸ்பர வரியை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என அறிவித்திருக்கிறது. எனவே, இந்த வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் பரஸ்பர வரியை காட்டி இந்தியா உடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் இனியும் தொடருமா? என கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை வாங்குமா? என கேள்வி எழுந்திருக்கிறது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறோம் என்று சொல்லிதான் 25% வரியை டிரம்ப் நம் தலையில் கட்டினார். அதேபோல, இந்தியா போட்ட வரிக்க பதிலாக 25% என மொத்தமாக 50% நம் தலையில் வந்து விடிந்தது.

இந்திய பொருட்கள்
இந்த வரியை காரணம் காட்டி இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். நீண்ட இழுபறிக்கு பின்னர் சமீபத்தில்தான் வர்த்த்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்க பொருட்களுக்கு நாம் எந்த வரியும் விதிக்க மாட்டோம். பதிலுக்கு நம்முடைய பொருட்களுக்கு அமெரிக்கா 18% வரியை போடும். இதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் பெரிய அளவில் கிராக்கி இருக்காது.
கடும் எதிர்ப்பு
இது ஒருபுறம் எனில், மறுபுறம் அமெரிக்காவிலிருந்து வேளாண் பொருட்கள் இந்தியாவுக்குள் வருவது இரண்டாவது பிரச்சனை. இத இந்திய விவசாயிகளை மொத்தமாக காலி செய்துவிடும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளன. உள்ளூர் விவசாயிகளும் இந்த வர்த்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
ரஷ்ய எண்ணெய்
இந்த சூழலில்தான் மத்திய அரசு அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு ரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்த கச்சா எண்ணெய்யை நிறுத்தியது. இதற்கு பதிலாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் வெனிசுலாவிலிருந்த எண்ணெய் வாங்க திட்டமிட்டு வருகிறது. ரஷய் நமக்கு சலுகை விலையில் எண்ணெய்யை கொடுத்தது. ஆனால், அமெரிக்கா அப்படி கொடுக்காது. இதனால் கொஞ்சம் நாட்கள் கழித்து, பெட்ரோல், டீசல் விலை உயரும்.
ஒப்பந்தம் ரத்தாகுமா?
ஆனால், அமெரிக்க நீதிமன்றம்தான் பரஸ்பர வரியை சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்துவிட்டதே! இனிமேலும் எதற்காக டிரம்பின் பேச்சை கேட்டுக்கொண்டு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. மட்டுமல்லாது விவசாயிகள் கடுமையாக எதிர்க்கும் இந்தியா-அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்க நீதிமன்றம்
இப்படி செய்ய முடியுமா? என்று தெரியாது. ஆனால், செய்தால் அது இந்தியாவுக்கு பலன் கொடுக்கும். இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அமெரிக்க சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்திதான் இன்று 10% வரியை டிரம்ப் அறிவித்திருக்கிறார். நாம் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் இதுபோல கூடுதலான வரியை டிரம்ப் விதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதை செய்ய அமெரிக்க நீதிமன்றம் அனுமதிக்குமா? என்றால் அது கேள்விக்குறிதான்.
-
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு!










Click it and Unblock the Notifications