டிரம்ப் வெற்றிக்கு பின்.. திடீரென நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன்.. என்ன சொன்னார் தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற நிலையில், அவர் அடுத்தாண்டு ஜன. மாதம் புதிய அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பைடன், அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடக்கும் என உறுதியளித்தார். மேலும், ஜனநாயகத்தில் மக்களின் விருப்பம் எப்போதும் மேலோங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை குடியரசு கட்சியின் டிரம்ப் வீழ்த்தினார்.

இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே கடந்த 2016- 2020 காலகட்டத்தில் டிரம்ப் அதிபராக இருந்துள்ள நிலையில், இப்போது மீண்டும் அப்பதவிக்குத் தேர்வாகியுள்ளார்.
நாட்டு மக்களிடையே உரை: இதற்கிடையே அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியான பிறகு முதல்முறையாக சிட்டிங் அதிபர் பைடன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதிகார பரிமாற்றம் அமைதியான முறையில் நடைபெறும் எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தில் மக்கள் விருப்பமே எப்போதும் மேலோங்கி நிற்கும் எனக் குறிப்பிட்டார். அதேபோல கமலா ஹாரிஸை பாராட்டிய அவர், கடைசி வரை களத்தில் கமலா ஹாரிஸ் கடும் போட்டி கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
பைடன் மேலும் பேசுகையில், "கமலா ஹாரிஸ் முடிந்தவரை முயற்சி செய்தார். கமலா ஹாரிஸும் அவரது டீமும் தாங்கள் செய்ததை நினைத்துப் பெருமைப்பட வேண்டும். நேற்றைய தினம் நான் புதிய அதிபராக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு வாழ்த்து சொன்னேன்.
அதிகார பரிமாற்றம்: மேலும் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடக்கும். இதற்காக எனது டீம் டிரம்ப் டீம் உடன் இணைந்து பணியாற்றும். அமெரிக்க மக்கள் இதைத் தான் விரும்புவார்கள்.. நான் கமலா ஹாரிஸிடமும் பேசினேன். அவர் மக்களுக்காகச் சேவையாற்றும் மிகச் சிறந்த ஒரு நபர். அதேநேரம் இந்த தேர்தல் தோல்வியைச் சமாளிப்பது ஜனநாயகக் கட்சிக்குக் கடினம் தான்.
இருவருமே நாட்டிற்காக தங்கள் விஷனை முன்வைத்துப் போட்டியிட்டார்கள். நாட்டு மக்கள் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். நாட்டு மக்களின் தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நான் அதிபராக எனது கடமையைச் செய்வேன். நான் எதைச் சொல்லி பதவிப் பிரமாணம் செய்தேனோ அதன்படி நடப்பேன்.. அரசியலமைப்பை மதிப்பேன்.. ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும்.
துவண்டு விடாதீர்கள்: பொது வாழ்க்கையில் பின்னடைவுகளைத் தவிர்க்க முடியாதது. அதேநேரம் இதைக் கண்டு ஜனநாயக கட்சியினர் துவண்டு போய்விடக்கூடாது. இது கடினமான நேரம் என்பது எனக்குத் தெரியும். உங்கள் கவலை எனக்குப் புரிகிறது.. ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள். நாம் மிகச் சிறந்த ஒரு ஆட்சியைக் கடந்த 4 ஆண்டுகளில் வழங்கி இருக்கிறோம். இது நான் அதிபராக இருந்ததால் இல்லை.. நாம் அனைவரும் இணைந்ததால் சாதிக்க முடிந்தவை" என்று தெரிவித்தார்.
டிரம்ப் படைத்த சாதனை: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வாவது இது 2வது முறை.. கடந்த 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் அவர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அதிபராகத் தேர்வானார். 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் அவர் பைடனிடம் தோல்வியடைந்த நிலையில், இப்போது 2024ல் அவர் கமலா ஹாரிஸை வீழ்த்தி மீண்டும் அதிபராகியுள்ளார். அமெரிக்காவில் ஒபாமா, புஷ் எனப் பலரும் தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்துள்ளனர். ஆனால், இதுபோல இடைவெளி விட்டு ஒருவர் அதிபராவது 132 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications