வாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்
Recommended Video
வாஷிங்டன்: உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான 'மைக்ரோசாப்ட்' தங்கள் நிறுவன ஊழியர்களை வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்று சலுகை அறிவித்து இருந்தது.
ஜப்பானில் செய்த இந்த பரிசோதனையில் சூப்பர் ரிசல்ட் கிடைத்திருப்பதாக அந்த நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸின் நிறுவனம் மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் கண்டுபிடித்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தான் உலகம் முழுவதும் டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாப்களில் பெரும்பாலும் உள்ளது என்பது ஊரறிந்த விஷயம்.

எவ்வளவு சலுகைகள்
இந்தநிறுவனம் அதிக திறன் மற்றும் அதிபுத்திசாலிகளை உலகில் எங்கிருந்தாலும் தேடிபிடித்து வேலைக்கு சேர்க்கிறது. அவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே பல லட்சங்களை சம்பளமாக கொடுத்து கவர்கிறது. அத்துடன் வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஜிம், விளையாட்டு கூடங்கள் , ஓய்வு அறை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை, குறைவான வேலைநேரம், விடுமுறைகள் என பல சலுகைகளை அளித்து வருகிறது.

மைக்ரோசாப்ட் ஜப்பான்
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக ஜப்பானில் ஒரு சலுகையை தங்கள் ஊழியர்களுக்கு அறிவித்து இருந்தது. இதன்படி மைக்ரோசாப்ட் ஊழியர்கள், வாரத்துக்கு 5 நாட்களுக்கு பதில் இனி வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் வேலை செய்தாலே போதும் என்று அறிவித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வது, அவர்களின் சொந்த வாழ்க்கைக்கும் நல்லது என்பதை உணர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது.

நல்ல பலன்
இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்த 2,300 ஊழியர்களுக்கு மாதம் 5 வெள்ளிகிழமைகள் விடுமுறை அறிவித்தது. இந்த விடுமுறைகள் அனைத்தும் ஊதியத்துடன் வழங்கப்பட்டது. இதன் மூலம், ஊழியர்களின் பணித் திறனும், தரமும் 40 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மைக்ரோசாப்ட்டின் ஜப்பான் கிளை தெரிவித்தது.

மைக்ரோசாப்ட் மகிழ்ச்சி
விடுமுறை, பிடித்த நேரத்தில் வேலை செய்வது போன்ற சலுகைகள், ஊழியர்கள் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் மனப்பான்மையை தடுத்து உள்ளது. நேரத்தை கடத்தும் செயலானது 25.4 சதவீதம் குறைந்து உள்ளது. மின்சார கட்டணம், காகிதங்கள் பயன்பாடு குறைந்துள்ளது என மைக்ரோசாப்ட் விடுமுறை அளித்ததற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளது. எனவே விரைவில் உலகம் முழுவதும் 4 நாட்கள் வேலை திட்டத்தை மைக்ரோசாப்ட் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications