மன்னிக்கவே மாட்டோம்.. இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் பற்றி.. ஒருவழியாக வாய் திறந்த அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக தனது மவுனத்தை கலைத்துள்ளது. இனம், மத அடிப்படையில் தாக்குதல் நடத்துபவர்களை மன்னிக்க முடியாது எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்கா வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கவும் அங்குள்ள டெக் நிறுவனங்களில் பணியாற்றவும் ஆயிரக்கணக்காக இந்தியர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். அமெரிக்காவில் கல்வி பயில செல்லும் மாணவர்கள் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தான் சமீப காலமாக அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் இதுவரை நான்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக முதல் முறையாக அமெரிக்கா தனது மவுனத்தை கலைத்துள்ளது. பாலினம், இனவாதம் அடிப்படையிலான வன்முறைக்கு மன்னிப்பே கிடையாது என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கம்யூனிகேசன்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி இந்த தகவலை தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது நிர்வாகம், இது போன்ற தாக்குதல்களை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தாக்குதல் நடத்துபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications