ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவோம்.. கிம் ஜாங் உன்னிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்..என்னாச்சு
வாஷிங்டன்: வடகொரியாவின் அத்து மீறல் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த நாடு அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளி உலகத்திற்கு தெரியாது.

வடகொரியாவில் இருந்து தப்பி வரும் நபர்கள் கூறும் தகவல் மற்றும் தென்கொரிய உளவு அமைப்புகள் சொல்லும் தகவல்களை வைத்தே வடகொரியாவில் நடக்கும் ஒரு சில தகவல்கள் கசிந்து வருகின்றன. அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் மட்டுமின்றி உலக வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே வடகொரியா சவால் விடுத்து வருகிறது.
அந்த நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் அன் தனது அடாவடி செயல்பாடுகளால் அமெரிக்காவையும் மிரட்டி வருகிறார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை, கடலுக்குள் செயற்கை சுனாமி ஏற்படுத்தும் சோதனை உலக நாடுகளை அதிர வைத்து வரும் கிம் ஜான் அன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையும் துளியும் மதிப்பது இல்லை.
வாரத்திற்கு ஒருமுறையாவது ஏவுகணை சோதனைகளை நடத்தி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். வடகொரியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த நாட்டில் வறுமை கோர தாண்டவம் ஆடுகிறது. ஆனாலும் இந்த வறுமையை மீறி தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதில்தான் வடகொரியா ஆர்வம் காட்டி வருகிறது.
வடகொரியாவின் அத்து மீறல் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த நாடு அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார். தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் யூன் சுக் யோல் சந்தித்துப் பேசினார்.
ஓவல் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்து வரும் வடகொரியாவிற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜோ பைடன், வடகொரிய தனது ஆயுதங்களை பயன்படுத்தினால் அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்வதோடு ஆட்சியின் தலைமையும் முடிவுக்கு வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக ஜோ பைடன் கூறியதாவது:- அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக வடகொரியா அணு ஆயுத தாக்குதலை முன்னெடுத்தால் அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் அந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications