ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவோம்.. கிம் ஜாங் உன்னிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்..என்னாச்சு
வாஷிங்டன்: வடகொரியாவின் அத்து மீறல் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த நாடு அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளி உலகத்திற்கு தெரியாது.

வடகொரியாவில் இருந்து தப்பி வரும் நபர்கள் கூறும் தகவல் மற்றும் தென்கொரிய உளவு அமைப்புகள் சொல்லும் தகவல்களை வைத்தே வடகொரியாவில் நடக்கும் ஒரு சில தகவல்கள் கசிந்து வருகின்றன. அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் மட்டுமின்றி உலக வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே வடகொரியா சவால் விடுத்து வருகிறது.
அந்த நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் அன் தனது அடாவடி செயல்பாடுகளால் அமெரிக்காவையும் மிரட்டி வருகிறார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை, கடலுக்குள் செயற்கை சுனாமி ஏற்படுத்தும் சோதனை உலக நாடுகளை அதிர வைத்து வரும் கிம் ஜான் அன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையும் துளியும் மதிப்பது இல்லை.
வாரத்திற்கு ஒருமுறையாவது ஏவுகணை சோதனைகளை நடத்தி தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். வடகொரியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த நாட்டில் வறுமை கோர தாண்டவம் ஆடுகிறது. ஆனாலும் இந்த வறுமையை மீறி தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதில்தான் வடகொரியா ஆர்வம் காட்டி வருகிறது.
வடகொரியாவின் அத்து மீறல் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அந்த நாடு அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார். தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் யூன் சுக் யோல் சந்தித்துப் பேசினார்.
ஓவல் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்து வரும் வடகொரியாவிற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜோ பைடன், வடகொரிய தனது ஆயுதங்களை பயன்படுத்தினால் அணு ஆயுத தாக்குதலை எதிர்கொள்வதோடு ஆட்சியின் தலைமையும் முடிவுக்கு வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக ஜோ பைடன் கூறியதாவது:- அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக வடகொரியா அணு ஆயுத தாக்குதலை முன்னெடுத்தால் அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் அந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
கண்கள் சிவந்த பிபி.. "டிரம்ப் இப்படி பண்ணிட்டாரு.." கடும் கோபத்தில் நெதன்யாகு.. என்ன நடந்தது? -
போர் நிறுத்தத்திற்கு காரணம் பாகிஸ்தானா? வெளியான முக்கிய தகவல்.. உள்ளே புகுந்து விளையாடிய சீனா! -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
விண்டோஸை தூக்கி எறியும் பிரான்ஸ்... அமெரிக்காவிற்கு பயப்படுகிறதா.. பின்னணி என்ன? -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
“பிளான் எங்கே..?” ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளை நச்சரிக்கும் டிரம்ப்! -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications