ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆரக்கிள்! எல்லாத்துக்கும் இந்த AI தான் காரணம்!
வாஷிங்டன்: ஆரக்கிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்திருக்கிறது. இதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிதி சுமையை சமாளிக்க, ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபன்ஏஐ உடனான 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம், ஆரக்கிள் நிறுவனத்தை பெரிய கடன் சுமையில் தள்ளியிருக்கிறது. எனவே நிலைமையை சமாளிக்க வேலை நீக்கத்தை கையில் எடுத்திருக்கிறது.

இந்த பணிநீக்கங்கள் பல வணிகப் பிரிவுகளை பாதிக்கும் எனவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தேவைப்படாது என கருதப்படும் சில பதவிகளும் இதில் அடங்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், கிளவுட் பிரிவில் புதிய பணியமர்த்தலை நிறுத்தியுள்ள ஆரக்கிள், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவும் மறுத்திருக்கிறது.
நிதி நெருக்கடி மற்றும் முதலீடுகள்
ஆரக்கிள் நிறுவனம் கடந்த 2 மாதங்களில் 58 பில்லியன் டாலரை கடன் பெற்றிருக்கிறது. இதில் 38 பில்லியன் டாலர் டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சினில் உள்ள தரவு மையங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும், 20 பில்லியன் டாலர் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒரு பெரிய வளாகத்திற்கு செலவிடப்பட்டுள்ளது.
ஆரக்கிள் தலைவர் லாரி எலிசன், நிறுவனத்தை பாரம்பரிய தரவுத்தள மென்பொருள் நிறுவனத்திலிருந்து, AI கிளவுட் போட்டியாளராக மாற்ற முயற்சிக்கிறார். இதற்காக, 156 பில்லியன் டாலர் மூலதனச் செலவு தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
பங்கு விலை மற்றும் சந்தை நிலை
ஆரக்கிள் பங்கு விலை, 2024 ஆம் ஆண்டில் 61% லாபத்தையும் கடந்த ஆண்டில் 20% லாபத்தையும் ஈட்டியது. ஆனால் கடந்த செப்டம்பரில் உச்சத்தை எட்டிய பிறகு, பங்குகள் 54% சரிந்துள்ளன. இதனால் சுமார் 463 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு இழக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான முதலீடுகளின் பணத்தேவைகள் காரணமாக தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற நெருக்கடியை சந்தித்துள்ளன. சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான வேலைகளை நீக்கியது.
அமெரிக்க வங்கிகள் மற்றும் வட்டி விகிதம்
பல அமெரிக்க வங்கிகள், ஆரக்கிள் தொடர்பான தரவு மையங்களுக்கு நிதி கொடுப்பதிலிருந்து பின்வாங்கியுள்ளன. செப்டம்பர் மாதம் முதல் ஆரக்களின் கடனுக்கான வட்டி விகித பிரீமியங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளன.
புதிய வாடிக்கையாளர்கள் ஒப்பந்த மதிப்பில் 40% வரை முன்பணம் செலுத்த வேண்டும் என ஆரக்கிள் கட்டாயப்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், செர்னர் என்ற சுகாதார மென்பொருள் பிரிவை விற்க யோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications