கைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்!
வாஷிங்டன்: பாகிஸ்தானை தொடர்ந்து சாம்பல் பட்டியலில் வைத்திருக்க பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (FATF) முடிவு செய்துள்ளது. .பயங்கரவாத நிதியுதவியை முழுவதுமாக கண்காணிக்க பாகிஸ்தானுக்கு மொத்தம் 27 செயல் திட்ட நிபந்தனைகளை எஃப்ஏடிஎஃப் வழங்கியிருந்தது. அதில் 21ஐ மட்டுமே நிறைவு செய்திருந்ததால் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது,
சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட 27 அம்ச செயல் திட்டத்தில் ஆறு விஷயங்களை ஏற்றுக்கொள்ள தவறியதற்காக அந்த நாட்டை சாம்பல் பட்டியலில் வைத்திருக்க உத்தரவிட்டது.
இந்த தகவலை ஆன்லை ஊடகவியாளர்கள் சந்திப்பில் . FATF தலைவர் மார்கஸ் பிளேயர் தெரிவித்தார். "பாகிஸ்தான் 27 இல் 21 ஐ நிறைவு செய்துள்ளது.. பாகிஸ்தான் ஒரளவு முன்னேற்றம் அடைந்துள்ளது, ஆனால் அது இன்னும் செய்ய வேண்டும்" என்றார்.
பாகிஸ்தானின் நல்ல பணிகளை உறுப்பினர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று FATFவிடம் துருக்கி முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.. 27 செய்ல்திட்டங்களில் மீதமுள்ள ஆறு பணிகள் முடிவடையும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, அதன் மதிப்பீட்டை முடிக்க நிதி நடவடிக்கை பணிக்குழு, பாகிஸ்தானுக்கு குழுவை அனுப்ப வேண்டும் என்று துருக்கி பரிந்துரைத்தது.

சாம்பல் பட்டியல்
பொதுவாக FATF இன் ஆன்-சைட் குழுக்கள், செயல் திட்டங்களை முடித்த பின்னரே ஆய்வுகள் செய்ய அனுமதிக்கின்றன. ஏனெனில் பொதுவாக இதுபோன்ற நடவடிக்கை என்பது அந்த நாட்டை சாம்பல் அல்லது கருப்பு பட்டியலிலிருந்து வெளியேற்றுவதற்கான அறிகுறியாகும். அதைத்தான் துருக்கி பாகிஸ்தானுக்கு எதிர்பார்க்கிறது.

மலேசியாவும் ஆதரிக்கவில்லை
ஆனால் பாகிஸ்தானை ஆய்வு செய்வதற்கான துருக்கியின் முன்மொழிவை FATF இன் 38 உறுப்பினர்களில் எவரும் ஆதரிக்கவில்லை. அப்படி ஆதரிக்காமல் போன உறுப்பினர்கள் நாடுகளில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, மலேசியா மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடங்கும்.

சாம்பல் பட்டியல்
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளும் பாகிஸ்தானின் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்ததில் திருப்தி அடையவில்லை. அந்த நாடுகள் தொடர்ந்து தீவிரவாதிகள், தீவிரவாதகுழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றன. இதை செய்தால் மட்டுமே சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குவோம் என அவை பிடிவாதமாக உள்ளன.

பாகிஸ்தானுக்கு சிரமம்
சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு கடினமாகி விடும் என்பதால் பாகிஸ்தான் அந்த பட்டியலில் இருந்து வெளிவர போராடி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications