லைவில் மோதிய கார்.. கீழே விழுந்தும் I am Okனு ரிப்போர்ட்டிங்கை தொடர்ந்த நிருபர்.. குவியும் பாராட்டு
வாஷிங்டன்: அமெரிக்காவில் லைவ்வாக செய்தியை வழங்கிக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் மீது கார் மோதிய போதிலும் விடாமல் ரிப்போர்ட்டிங் செய்த காட்சி தீயாய் பரவி வருகிறது.
அமெரிக்காவின் WSAZ என்ற செய்தி சேனலின் நிருபராக பணியாற்றி வருகிறார் டோரி யோர்கே. அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள டன்பரில் குடிநீர் இணைப்பு உடைந்து தண்ணீர் வீணாகி வருவது குறித்து செய்திகளை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்தார்.
செய்தி அறையில் டிம் இர்ரிடம் தகவல்களை கொடுத்து கொண்டிருந்த நிலையில் அவர் மீது வலது பக்கமாக திரும்பிய கார் ஒன்று மோதியது. இதனால் டிம் அதிர்ச்சி அடைந்தார்.
கோவா சட்டசபை தேர்தல்: பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா- துண்டு துண்டாக சிதறுகிறது?
டோரி கீழே விழுந்தார்
இந்த கார் மோதியதில் டோரி கீழே விழுந்தார். எனினும் உடனே எழுந்த அவர் செய்தி வழங்கும் தனது பணியை தொடர்ந்தார். அப்போது அவர் ஓ மை காட் என் மீது ஒரு கார் மோதியது. நான் நலமாக இருக்கிறேன் டிம் என செய்தி தொகுப்பாளர் டிம்மிடம் தெரிவித்தார். அப்போது டிம், "இதுதான் உங்களுக்கு முதல் அனுபவம்" என தெரிவித்தார்.
டாஸ்மாக் கிடங்கு
விசாரணையில் அந்த சரக்கு வாகனம், மணலூர் டாஸ்மாக் கிடங்கிலிருந்து விரகனூர் டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லும் மது பாட்டில்கள் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மதுரை ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த அஜய், ஜெயஹிந்த்ப்புரம் ஆனந்த், சதீஷ்குமார், டேவிட்துரை என்பது தெரியவந்தது.
தினமும் 20 முதல் 30 லிட்டர் மது திருட்டு
இவர்கள் தினமும் இது போன்று லோடு ஏற்றி வந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வேனை நிறுத்தி மது பானங்களைத் திருடியதும் தெரியவந்தது. தினமும் 20 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை மதுவை திருடி வீட்டிற்கு கொண்டு சென்று வேறு பாட்டில்களில் நிரப்பி இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் விசாரணை
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அது போல் வேறு எங்கெல்லாம் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே சில டாஸ்மாக் கடைகளில் மதுவுக்கு கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதில் இவ்வாறு தண்ணீரை கலந்து விற்பனை செய்வது குடிகாரர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது.