கோடி கோடியாய் ஏப்பம் விட்ட நபர்.. வரி ஏய்ப்பு புகாரில் 509 மில்லியன் டாலர் அபராதம்.. கோர்ட் அதிரடி
509 மில்லியன் அபராதம் செலுத்தி உள்ளார் ரஷ்ய கோடீஸ்வரர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரி ஏய்ப்பு செய்ததால் ரஷ்ய கோடீஸ்வரர் ஒலெக் டிங்கோவ் $509 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புலனாய்வு பத்திரிகையான 'புரோபப்ளிகா' அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் வரி விவரங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க் போன்ற பெரும் பணக்காரர்கள், பல வருஷமாக எந்தவித வரியும் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது.
அதாவது 25 பணக்கார அமெரிக்கர்கள் தங்களின் மிகப்பெரிய சொத்துடன் ஒப்பிடுகையில், வருமான வரியை மிகக்குறைவாகவே செலுத்துவதாகவும்,மொத்த வருமானத்தில் சராசரியாக 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துகிறார்கள் என்றும், சில சமயங்களில் எதுவுமே செலுத்துவதில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும், விவாதங்களும் எழ ஆரம்பித்தன.. இப்படிப்பட்ட தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்வது சட்டவிரோதமானது என்று வெள்ளை மாளிகையும் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு தொழிலதிபர் வரிஏய்ப்பு செய்ததால், $509 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமெரிக்க கோர்ட் நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவர் பெயர் டிங்கோ டிக்காப்.. இவர் அமெரிக்காவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார்... கிரெடிட் சர்வீசஸின் நிறுவனராக உள்ளார்.. இதைதவிர, ஆன்லைன் வங்கி உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருபவர்.. ரஷ்யாவில் பிறந்த இவருக்கு வயது 53 வயதாகிறது.. 1996ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட ஒலெக் டிங்கோவ், $1 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை மறைத்ததாக கூறப்படுகிறது... இதன்பின்பு அவர் பிரிட்டன் சென்றார்... இதனை கண்டுபிடித்த அமெரிக்க நீதித்துறை ஒலெக் டிங்கோவ்வை நாடு கடத்த ஆண்டு பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்து இருந்தது .. இது தொடர்பாக விசாரணையும் நடந்து வந்த நிலையில், ஏய்ப்பு செய்ததை கோடீஸ்வரர் ஒலெக் டிங்கோவ் ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு $509 மில்லியன் டாலர் அபராதம் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications