Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடி கோடியாய் ஏப்பம் விட்ட நபர்.. வரி ஏய்ப்பு புகாரில் 509 மில்லியன் டாலர் அபராதம்.. கோர்ட் அதிரடி

509 மில்லியன் அபராதம் செலுத்தி உள்ளார் ரஷ்ய கோடீஸ்வரர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரி ஏய்ப்பு செய்ததால் ரஷ்ய கோடீஸ்வரர் ஒலெக் டிங்கோவ் $509 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புலனாய்வு பத்திரிகையான 'புரோபப்ளிகா' அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் வரி விவரங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 Russian billionaire Oleg tinkov pays 509 million to settle US tax evasion charges

இதில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க் போன்ற பெரும் பணக்காரர்கள், பல வருஷமாக எந்தவித வரியும் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது.

அதாவது 25 பணக்கார அமெரிக்கர்கள் தங்களின் மிகப்பெரிய சொத்துடன் ஒப்பிடுகையில், வருமான வரியை மிகக்குறைவாகவே செலுத்துவதாகவும்,மொத்த வருமானத்தில் சராசரியாக 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துகிறார்கள் என்றும், சில சமயங்களில் எதுவுமே செலுத்துவதில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும், விவாதங்களும் எழ ஆரம்பித்தன.. இப்படிப்பட்ட தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்வது சட்டவிரோதமானது என்று வெள்ளை மாளிகையும் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஒரு தொழிலதிபர் வரிஏய்ப்பு செய்ததால், $509 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமெரிக்க கோர்ட் நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

அவர் பெயர் டிங்கோ டிக்காப்.. இவர் அமெரிக்காவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார்... கிரெடிட் சர்வீசஸின் நிறுவனராக உள்ளார்.. இதைதவிர, ஆன்லைன் வங்கி உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருபவர்.. ரஷ்யாவில் பிறந்த இவருக்கு வயது 53 வயதாகிறது.. 1996ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட ஒலெக் டிங்கோவ், $1 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை மறைத்ததாக கூறப்படுகிறது... இதன்பின்பு அவர் பிரிட்டன் சென்றார்... இதனை கண்டுபிடித்த அமெரிக்க நீதித்துறை ஒலெக் டிங்கோவ்வை நாடு கடத்த ஆண்டு பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்து இருந்தது .. இது தொடர்பாக விசாரணையும் நடந்து வந்த நிலையில், ஏய்ப்பு செய்ததை கோடீஸ்வரர் ஒலெக் டிங்கோவ் ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு $509 மில்லியன் டாலர் அபராதம் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+