ஷாக்கிங்.. தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பள பிடித்தம்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு
தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் சம்பளத்தில் 200 அமெரிக்க டாலர்கள் பிடித்தம் செய்யப்படும் என்று டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது... இது ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது... உலகிலேயே தொற்று பாதிப்பில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது..
நாளுக்கு நாள் அங்கு டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது... எனவே, கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்..

தடுப்பூசி
அத்துடன், தடுப்பூசி போட பொது மக்களுக்கு விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள சிலர் முன்வராமலும் உள்ளனர். எனவே, மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், சில நிறுவனங்கள் தடுப்பூசி கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தும் வருகின்றன...

சம்பள பிடித்தம்
அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு புதுவித அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் சம்பளத்தில் 200 அமெரிக்க டாலர்கள் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்...
Recommended Video

டெஸ்ட்
கொரோனா தடுப்பூசியை ஊழியர்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்படி ஒரு கறார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் காரணம் கூறுகிறது.. வரும் 12-ம் தேதி முதல், முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத ஊழியர்களுக்கு வாரம் ஒரு முறை கொரோனா டெஸ்ட் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

நடவடிக்கை
அதுமட்டுமல்ல, கொரோனாவால் பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வண்ணம் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது... சம்பளத்தில் இருந்து 15,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்ற செய்தியை கேட்டு, எர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications