Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்கிங்.. தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பள பிடித்தம்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு

தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் சம்பளத்தில் 200 அமெரிக்க டாலர்கள் பிடித்தம் செய்யப்படும் என்று டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது... இது ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.

அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது... உலகிலேயே தொற்று பாதிப்பில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது..

நாளுக்கு நாள் அங்கு டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது... எனவே, கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்..

 தடுப்பூசி

தடுப்பூசி

அத்துடன், தடுப்பூசி போட பொது மக்களுக்கு விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள சிலர் முன்வராமலும் உள்ளனர். எனவே, மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், சில நிறுவனங்கள் தடுப்பூசி கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தும் வருகின்றன...

 சம்பள பிடித்தம்

சம்பள பிடித்தம்

அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு புதுவித அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் சம்பளத்தில் 200 அமெரிக்க டாலர்கள் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்...

Recommended Video

    Covid vaccine போடனுமா? இனி வரிசையில் நிக்க வேணாம்!.. | Oneindia Tamil
    டெஸ்ட்

    டெஸ்ட்

    கொரோனா தடுப்பூசியை ஊழியர்கள் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்படி ஒரு கறார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் காரணம் கூறுகிறது.. வரும் 12-ம் தேதி முதல், முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத ஊழியர்களுக்கு வாரம் ஒரு முறை கொரோனா டெஸ்ட் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...

    நடவடிக்கை

    நடவடிக்கை

    அதுமட்டுமல்ல, கொரோனாவால் பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வண்ணம் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது... சம்பளத்தில் இருந்து 15,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்ற செய்தியை கேட்டு, எர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+