அதிபர் தேர்தலில் டிரம்பால் மீண்டும் போட்டியிட முடியாது... முன்னாள் ஐநா தூதர் திட்டவட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல்களில் இனி டிரம்பால் போட்டியிட முடியாது என்று ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும் டிரம்ப் ஆதரவாளருமான நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி வரை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். அவரது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி, டிரம்ப் ஆதரவாளர்களும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
அப்படிதான் கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து, டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர் மீதான கண்டன தீர்மானம் தற்போது நாடாளுமன்றத்தின் சென்ட் சபையில் விசாரணையில் உள்ளது.

போட்டியிடக் கூடாது
டிரம்ப் மீதான விசாரணை குறித்து ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறுகையில், "அதிபர் தேர்தலுக்குப் பின் டிரம்பிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரது செயல்பாடுகள் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றே நினைக்கிறேன். அவர் இதிலிருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டார்" என்றார்.

கட்சியை சீரழித்துவிட்டார்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்தான் நிக்கி ஹேலி. இவர் கடந்த 2017-18 வரை ஐநாவுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர். தீவிர டிரம்ப் ஆதரவாளராக இருந்த இவர், கடந்த நாடாளுமன்ற கட்டட வன்முறைக்குப் பின், தொடர்ந்து டிரம்பிற்கு எதிராகவே கருத்து கூறி வருகிறார். மேலும், குடியரசு கட்சியினர் அனைவரும் டிரம்ப் எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர் குடியரசு கட்சியின் பெயரை சீரழித்து விட்டார் என்றும் நிக்கி ஹேலி கூறினார்.

அதிபர் தேர்தல்
தொடர்ந்து டிரம்பை கண்டித்துப் பேசிய அவர், "அவர் செய்யக் கூடாது பல விஷயங்களைச் செய்தார். எனவே, குடியரசு கட்சியினர் அவருக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கக் கூடாது. அவர் நம் அனைவரிடமும் தொடர்ந்து பொய் கூறிவந்தார். நாம் அவரை இப்போது காப்பாற்றிவிட்டால், மீண்டும் அவர் இதையேதான் செய்வார்" என்றார். மேலும், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டன தீர்மானம்
முன்னாள், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் தற்போது அமெரிக்காவின் சென்ட் சபையில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிரம்பை தண்டிக்கக் குறைந்தபட்சம் 67 எம்பிகளின் ஆதரவு ஜனநாயகக் கட்சியினருக்குத் தேவை. ஆனால்., தற்போது வரை வெறும் ஐந்து எம்பிகள் மட்டுமே டிரம்ப் எதிராக வாக்களித்துள்ளனர். இதனால் அவருக்கு எதிரான இந்தக் கண்டன தீர்மானம் வெற்றி பெறுவது கடினம் என்றே அமெரிக்க அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை












Click it and Unblock the Notifications