வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ட்ரம்ப்... என்ன மருந்து கொடுக்கிறார்கள்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ட்ரம்ப்பிற்கு தற்போது ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : கொரோனா தொற்றுக்கு ஆளான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதிபர் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை அலட்சியமாக நினைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். முக கவசம் அணிவதை கேலியாக பேசினார். பொது இடங்களில் முக கவசம் இன்றி வலம் வந்தார் ட்ரம்ப் விளைவு அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று இரவு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில். நன்றாக இருக்கிறேன் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

ரெம்டெசிவிர் மருந்து
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ட்ரம்பிற்கு காய்ச்சல் அதிகரிக்கவே தற்போது வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிரை ட்ரம்புக்கு கொடுக்கும்படி வெள்ளை மாளிகை மருத்துவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து அவருக்கு ஒரு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் நலம்
இது தொடர்பாக அதிபர் ட்ரம்பின் மருத்துவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்டர் ரீட் மருத்துவமனை மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை வல்லுநர்களிடம் ஆலோசித்தபிறகு அதிபர் ட்ரம்பை வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு இடம் மாற்ற பரிந்துரைத்தேன். தற்போது அதிபர் நலமாக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

என்னென்ன சிகிச்சை
வல்லுநர்களுடன் ஆலோசித்தபிறகு அதிபருக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். ஏற்கெனவே அவருக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு தற்போது ஆக்சிஜன் சப்ளை உதவி தேவையில்லை என்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகை அறிவிப்பு
ட்ரம்புக்கு கொரோனா உறுதியான உடன் ரெஜெனெரான் நிறுவனம் தயாரித்த ஆன்டிபாடி ஊசி போடப்பட்டுள்ளது. மேலும், ஜிங்க், வைட்டமின் டி, ஃபெமொடிடின், மெலடோனின், ஆஸ்பிரின் போன்றவையும் ட்ரம்புக்கு கொடுக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications