பொத்திப் பொத்தி பாதுகாத்தும்.. டிரம்ப் உதவியாளரை தொற்றியது கொரோனா.. !
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு வந்திருப்பதால் வெள்ளை மாளிகை பதட்டம் அடைந்துள்ளது.
Recommended Video
அமெரிக்க அதிபருக்கு உணவு பரிமாறும் குழுவில் இடம் பெற்றுள்ள ஒருவருக்கே கொரோனா பாதிப்பு வந்துள்ளது. இத்தனைக்கும் அவர் மாஸ்க் எல்லாம் போட்டு பக்காவான முன்னேற்பாடுகளுடன் இருந்தும் கூட அவரை கொரோனா தாாக்கியுள்ளது. இதையடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அதிபர் டிரம்ப் இதுகுறித்து பதட்டம் அடையாமல்தான் உள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், பாதிக்கப்பட்ட இந்த உதவியாளருடன் எனக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை தனிப்பட்ட முறையில் நான் அவரிடம் பழகவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக செய்யப்படும் பரிசோதனைகளின்போதுதான் இந்த உதவியாளருக்கு கொரோனா வந்திருப்பது தெரிய வந்தது.

டிரம்ப் ஆச்சரியம்
அதேசமயம், இந்த புதிய நிகழ்வு குறித்து டிரம்ப் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,இது சற்று வினோதமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே கொரோனா குறித்து அலட்சியமாகவே இருந்து வருகிறார் டிரம்ப். மாஸ்க் போட மாட்டேன் என்றும் அவர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். அவரது கொரோனா கொள்கை குறித்து அமெரிக்கர்கள் கடும் கோபம் மற்றும் அதிருப்தியில் உள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக இருந்தும்
இந்த நிலையில் வெள்ளை மாளிகை ஊழியர் ஒருவருக்கே கொரோனா வந்திருப்பது அங்கு அதிர்ச்சியை தருவதாக உள்ளது. இத்தனைக்கும் மாஸ்க் உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அங்கு பின்பற்றப்படுகின்றன. அதையும் தாண்டி கொரோனா தாக்கியிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

நாங்க நல்லாருக்கோம்
இதுகுறித்து செய்தியாளர்களிடையே டிரம்ப் பேசுகையில், வெள்ளை மாளிகையில் பலரும் மாஸ்க் அணிகின்றனர். நான், எனது மனைவி, மகன் ஆகியோர் நல்ல நலமுடன் உள்ளோம். அனைவரும் கொரோனா போராளிகள். உங்களைப் போலத்தான் நாங்களும் போராளிகள் என்றார் டிரம்ப். வெள்ளை மாளிகைக்குள் கொரோனா வந்து விட்டதால் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோருக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை துணை அதிபர் மைக் பெனஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் மோசம்
உலகிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் இதுவரை 12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அமெரிக்கர்களில் பலரும் எங்களுக்கு லாக்டவுன் வேண்டாம்.. சுதந்திரம் வேண்டும் என்று முழங்கிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications