இன்னும் சில மாதம் தான்.. அதிபர் பதவியில் இருந்து நான் நீக்கப்படுவேன்! டிரம்ப் அடுத்து சொன்ன வார்த்தை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் இன்னும் சில மாதங்களில் தான் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சமீபத்தில் தான் வெனிசுலாவை தாக்கி அந்நாட்டின் அதிபரைக் கைது செய்திருந்த நிலையில், டிரம்ப் இதுபோல கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. டிரம்ப் இதுபோல சொல்ல என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்க அதிபராகக் கடந்தாண்டு ஜனவரியில் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்று அதிகாரப்பூர்வமாக இன்னும் ஓராண்டு கூட ஆகவில்லை. இதற்கிடையே இன்னும் சில மாதங்கள் மட்டும் அதிபர் பதவியில் இருக்கும் சூழல் ஏற்படலாம் என டிரம்ப் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

டிரம்ப்
அதாவது தான் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்தாண்டு நவம்பரில் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் தனது குடியரசுக் கட்சி வெல்லாவிட்டால் நிச்சயம் தனக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வருவார்கள் என டிரம்ப் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் குடியரசுக் கட்சி எம்பிக்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், "மிட் டேர்ம் தேர்தல்களில் நாம் வெல்ல வேண்டும்.. இல்லையென்றால் என்னைப் பதவி நீக்கம் செய்வார்கள். எனக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வர காரணம் கண்டுபிடிப்பார்கள். நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன்" என்று அவர் தெரிவித்தார்.
மிட் டேர்ம் தேர்தல்
அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் கழித்து மிட் டேர்ம் தேர்தல் நடைபெறும். அங்குப் பிரதிநிதிகள் சபை எம்பிக்கள் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக மட்டும் உள்ள நிலையில், 435 பிரதிநிதிகள் சபை எம்பிக்களுக்கு தேர்தல் நடக்கும். செனட் சபையில் 100 இடங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சீட்களுக்கு தேர்தல் நடக்கும்.
இந்த மிட் டேர்ம் தேர்தலில் டிரம்ப் கட்சி தோற்றாலும், அவரது அதிபர் பதவிக்கு எந்தவொரு பாதிப்பும் வராது. இருப்பினும், அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் அறிவிக்கும் முக்கியமான உத்தரவுகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையை இழந்தால் அதிபர் டிரம்பால் தான் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியாது. மேலும், டிரம்ப்பிற்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.
எதிர்ப்புகள்
அமெரிக்கப் படைகள் சமீபத்தில் தான் வெனிசுலாவை தாக்கி அந்நாட்டின் அதிபர் மதுரோவை கைது செய்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்தன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பதவி நீக்கத் தீர்மானம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே, மிட் டேர்ம் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தால் இம்மீச்மெண்ட் தீர்மானத்தை அவர் எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம்!
இது தொடர்பாக நியூயார்க்கைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி எம்பி டான் கோல்ட்மேன் கூறுகையில், "வெனிசுலா நடவடிக்கையின் போது டிரம்ப்பும் கூட மதுரோவைப் போலத் தான் நடந்து கொண்டார். சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான முறைகளை டிரம்ப் பயன்படுத்தினார். இது அமெரிக்காவின் ஜனநாயகத்தைச் சிதைத்து, அரசியலமைப்பை மீறி, சர்வாதிகாரம் நோக்கி நாட்டை இழுத்து செல்கிறது" என்றார்.
காரணம்
அதாவது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பலரும் வெனிசுலா மீதான நடவடிக்கையை எதிர்க்கவில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமல்.. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் டிரம்ப் உத்தரவிட்டது தவறு என்றே ஜனநாயகக் கட்சியினர் டிரம்பை விமர்சித்து வருகிறார்கள். இதனால் வரும் காலங்களில் அமெரிக்க அரசியல் பரபரப்பாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications