கிரீன் கார்டு பெற புதிய கட்டுப்பாடுகள்.. இந்தியர்களுக்கு நெருக்கடி! டிரம்ப் போடும் புதிய பிளான்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் சுமார் 10 லட்சம் பேர், கிரீன் கார்டு வேண்டி காத்திருக்கிறார்கள். இந்நிலையில், கிரீன் கார்டு பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார். இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே உள்ளே வந்தவர்களை வெளியேற்ற வெண்டும் என்று டிரம்ப் உட்பட அவர் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கையில் பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு பெற தடை விதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல்படி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான், சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, மியான்மர், சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கிரீன் கார்டு மற்றும் விசா ஒப்புதல்களைத் தடுப்பதற்கான திட்ட வரைவு ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் அவர்களுக்கும் இந்த விதி பொருந்தலாம்.
அதாவது இந்த 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த தடைக்கு முன்னர் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தாலும் அவர்களுக்கு கிரீன் கார்டு கொடுக்க தடை விதிக்க டிரம்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் வசிப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியாகும். இதை வைத்து அமெரிக்க மக்கள் பலரும் பல்வேறு சலுகைகளை பெற முடியும். ஆனால் கிரீன் கார்டு பெற்ற நபர், அமெரிக்காவை விட்டு ஓராண்டுக்கும் மேல் வெளிநாட்டில் தங்கியிருப்பின் அவரது கிரீன் கார்டு வாபஸ் பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கிரீன் கார்டை கொண்டுதான் அமெரிக்காவின் குடியுரிமையை பெற முடியும் என்பதால், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஏற்கெனவே H-1B விசாவின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் தலைவர்கள் பேசி வருகிறார். தற்போது ஆண்டுக்கு 85,000 அளவுக்கு H-1B விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில் இந்த எண்ணிக்கையை வெறும் 10,000 ஆக குறைக்க வேண்டும் என்றும், இந்த 10,000 எண்ணிக்கையும் மருத்துவ நிபுணர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கு தேவையான மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை குறையும், இதனால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் தற்போது கிரீன் கார்டு பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது விவாதங்களை தூண்டியிருக்கிறது.
-
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை!












Click it and Unblock the Notifications