''அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது''.. வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பெருமிதம்
வாஷிங்டன்: அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. ஆபத்தை சாத்தியமாக மாற்றுகிறது. நெருக்கடியில் வாய்ப்பை கண்டுணரந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கடந்த வருடம் தினமும் 3 லட்சத்தை கடந்து சென்ற கொரோனா பாதிப்பு தற்போது 50,000 அளவில் குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனா
உலகின் வலலரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கடந்த ஆண்டு கொரோனா பாடாய்படுத்தி விட்டது. இப்போதும் அதிக தொற்று பாதிப்பில் அமெரிக்காவே முதலிடம் பிடித்துள்ளது. அங்கு இதுவரை மொத்தம் 32,927,091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.587,384 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 25,521,913 பேர் குணமடைந்துள்ளனர்.

கூடுதல் தளர்வுகள்
அங்கு 6,817,794 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர தொற்று பரவல் காரணமாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கும் போடப்பட்டது. இதன் காரணமாக அங்கு தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டது. தினமும் 50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளே பதிவாகி வருகின்றன.

மோசமான தாக்குதல்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று ஒரு நூற்றாண்டின் மிக மோசமான ஒன்றாகும்.பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும். உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நமது ஜனநாயகம் மீதான மோசமான தாக்குதலாகும்.

முன்னேற்றம் நோக்கி நகர்கிறது
வெறும் 100 நாட்களுக்குப் பிறகு நான் தேசத்திற்கு ஒன்றை தற்போது மீண்டும் சொல்ல முடியும். அமெரிக்கா மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. ஆபத்தை சாத்தியமாக மாற்றுகிறது. நெருக்கடியில் வாய்ப்பை கண்டுணரந்துள்ளது என்று ஜோ பிடன் தெரிவித்தார். 1.8 டிரில்லியன் டாலர் முதலீட்டில் குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றில் முன்னேற்ற திட்டங்கள், மேலும் 2.3 டிரில்லியன் டாலர் செலவில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் ஆகியற்றை செய்லபடுத்த பைடன் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications