அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை... ஐநா கவலை
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி நாடாளுமன்ற கட்டடத்தில் நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Recommended Video

இதைத்தொடர்ந்து வாஷிங்டனில் பொது அவசரநிலையை 15 நாட்களுக்கு அமல்படுத்துவதாக வாஷிங்டன் மேயர் முரியல் பவுஸர் அறிவித்தார். புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற மறுநாள் வரை அவசரநிலை இருக்கும்.
இந்த வன்முறை தொடர்பாக உலக தலைவர்கள் பலரும் தங்கள் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய சூழ்நிலைகளில், வன்முறையிலிருந்து விலக வேண்டியதன் அவசியத்தையும், ஜனநாயக வழிமுறைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை அரசியல் தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்குக் கட்டாயம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் தனது ட்விட்டரில், "வாஷிங்டன் தாக்குதல் எனக்குக் கவலையளிப்பதாக உள்ளது. உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்த முக்கியமான நேரத்தில் நமது நாட்டில் அமைதி மற்றும் ஜனநாயகம் மேலோங்கும் என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications