சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள்
வாஷிடன்: சும்மா இருந்த ஈரானை தாக்கி, வளைகுடா போரை அமெரிக்கா உருவாக்கிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே கடந்த 2022க்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த போருக்கும், தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பதற்கும் காரணம் டிரம்ப்தான் என்று மக்கள் கொந்தளித்துள்ளனர்.

அமெரிக்காவில் பெட்ரோல் விலை என்ன?
இன்றைய நிலவரப்படி, ஒரு கேலன் (3.8லி) பெட்ரோலின் சராசரி விலை 4 டாலர்களைத் தாண்டியுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.376. கடந்த 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு எரிபொருள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் போரால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்ததே இந்த திடீர் உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
விலையேற்றம்
ஏஏஏ (AAA) வாகன சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கேலன் வழக்கமான பெட்ரோலின் தேசிய சராசரி விலை தற்போது 4.02 டாலராக உள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த விலையை விட இது ஒரு டாலருக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஓட்டுநர்கள் இதேபோன்ற அதிக விலையை கடைசியாக 4 ஆண்டுகளுக்கு முன்புதான் சந்தித்தனர். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, அப்போதும் எரிபொருள் விலை இதேபோன்ற உச்சத்தை அடைந்திருந்தது.
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்
இந்த விலை தேசிய அளவிலான சராசரியாகும். அதாவது, சில மாநிலங்களில் ஓட்டுநர்கள் ஒரு கேலன் 4 டாலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. விநியோகம் மற்றும் வெவ்வேறு வரிகள் போன்ற காரணிகளால் மாநிலத்திற்கு மாநிலம் விலைகள் வேறுபடுகின்றன. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதிலிருந்து, பெட்ரோலின் முக்கிய மூலப்பொருளான கச்சா எண்ணெயின் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
மக்கள் போராட்டம்
இந்த மோதல், மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களிடையே விநியோகச் சங்கிலியில் கடுமையான தடங்கல்களையும், உற்பத்திக் குறைப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாகவே கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம், நுகர்வோரையும் வணிகங்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. பல குடும்பங்கள் ஏற்கனவே அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளால் சிரமப்பட்டு வருகின்றன.
இந்த விலை உயர்வு, அமெரிக்கா முழுவதும் டிரம்புக்கு எதிரான கோபமாக மாறியிருக்கிறது. மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications