"ஒரே மாசம்.." அமெரிக்கா சொன்னது போலவே ரஷ்யாவில் நடந்த கொடூர தாக்குதல்! கோட்டைவிட்ட புதின்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவில் இசைக் கச்சேரியில் நடந்த மிக மோசமான தாக்குதலில் 60+ பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் இரு முக்கியமான நாடுகள் என்றால் அது அமெரிக்காவும் ரஷ்யாவும் தான். உலகின் டாப் நாடுகளாக இருக்கும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும்.

US has Warned Russia Of Planned Terror Attack A Month Ago

அதிலும் பனிப்போர் காலகட்டத்தில் மறைமுகமாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் பல ஆண்டுகள் தொடர்ந்தது. இப்போது அந்தளவுக்கு வெளிப்படையாக மோதல் இல்லை என்ற போதிலும் இரு தரப்பும் நேர் எதிரான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து இருக்கும்,.

எச்சரித்த அமெரிக்கா: இதற்கிடையே ரஷ்யாவில் நடந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே எச்சரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அருகே இசைக் கச்சேரி அரங்கில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கண்ணில் பட்ட அனைவரையும் அவர்கள் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி தொடங்கி உலகின் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலில் இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை. உக்ரைன் கூலிப்படை இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் ரஷ்ய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர், அதன் பின்னரே இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

வெள்ளை மாளிகை: இந்தத் தாக்குதல் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்கோவில் பெரிய நிகழ்ச்சிகளைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இம்மாத மாத தொடக்கத்திலேயே அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்ததாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது..

இருப்பினும், ரஷ்யா சரியான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. இதன் காரணமாகவே அங்கே மோசமான துப்பாக்கிச் சூடு அரங்கேறியுள்ளது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ அருகே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

என்ன சொன்னார்: இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறுகையில், "இந்த மாத தொடக்கத்தில் தான் நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம். மாஸ்கோவில் குறிப்பாகப் பெரிய கூட்டங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக நாங்கள் ரஷ்யாவை எச்சரித்தோம். அமெரிக்க அதிகாரிகள் இந்த தகவலை ரஷ்ய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்" என்றார்.

பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு நீண்டகால "duty to warn" என்ற பாலிசியை பின்பற்றி வருகிறது. உலகின் மற்ற நாடுகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்தால் அமெரிக்கா அந்த நாடுகளை எச்சரிக்கும். அமெரிக்காவுக்கு விரிவான உளவு அமைப்பு இருக்கும் நிலையில், அவர்களிடம் இருந்து பெறும் தகவல்களை உரிய நேரத்தில் அமெரிக்கா எச்சரிக்கும். அதன்படியே அவர்கள் ரஷ்யாவை எச்சரித்துள்ளார்கள். ரஷ்யா உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால் மோசமான தாக்குதல் அரங்கேறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+