டிரம்ப் திடீர் முடிவு.. இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர் அடுத்த 60 நாட்கள் குடியுரிமை பெற தடை
வாஷிங்டன்: அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற தடைவிதித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். இதன் காரணமாக இந்தியர்கள் உள்பட எந்த வெளிநாட்டவர்களும் அமெரிக்காவில் தற்காலிகமாக குடியுரிமை பெற முடியாது.
Recommended Video
அமெரிக்காவில் இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேஷியர்கள் உள்பட பல்வேறு வெளிநாட்டினர் தான் கணினி துறையில் கோலோச்சுகிறார்கள். குறிப்பாக இந்தியர்கள் ஏராளமானோர் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
வெளிநாட்டினர் யாரையாவது உயர் திறன் உடையவர்கள் என்ற வகையில் தொழில்நுட்ப பணியில் சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள நிறுவனங்கள் விரும்பினால், அளிக்கப்படும் விசா எச்1பி விசா மற்றும் எல்1 விசா. இந்த விசாக்கள் மூலம் அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்று லட்சக்கணக்கில் வேலை செய்கிறார்கள்.

45 ஆயிரம் பேர் பலி
இந்நிலையில் கொரோனாவின் தாக்குதல் அமெரிக்காவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் கொரோனாவால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்து வருகிறார்கள்.

டிரம்ப் மீது அதிருப்தி
இதனால் கொரோனாவால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இதனால் அதிபர் டிரம்ப் மீது அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. முன்னரே டிரம்ப் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

வெளிநாட்டவருக்கு தடை
இந்நிலையில் அதிபர் தேர்தலில் மீண்டும் டிரம்ப் போட்டியிடும் நிலையில் அவர் மீது கடும் அதிருப்தி பரவி வருகிறது. இதனால் அமெரிக்கர்கள் மத்தியில் ஆதரவை பெறுவதற்காக வெளிநாட்டினர் அஸ்திரத்தை டிரம்ப் கையில் எடுத்துள்ளார். இதன்படி அமெரிக்காவில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் அடுத்த 60 நாட்களுக்கு குடியுரிமை பெற முடியாத படி டிரம்ப் தடை விதித்துள்ளார்.

வேலைவாய்ப்பு
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், தனது நடவடிக்கை தற்போதைய பணிநிறுத்தத்தின் போது வேலை இழந்த அமெரிக்கர்களுக்கு உதவும். குடியேற்றத்தை இடைநிறுத்துவதன் மூலம், அமெரிக்கா மீண்டும் திறக்கும்போது வேலையில்லாத அமெரிக்கர்களை வேலைகளுக்கு முதலிடத்தில் வைக்க இது உதவும். இந்த இடைநிறுத்தம் 60 நாட்களுக்கு அமலில் இருக்கும். அந்த நேரத்தில் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் எந்தவொரு நீட்டிப்பு அல்லது மாற்றங்களையும் முடிவு செய்வேன் என்றார்.
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications