மோடியை பார்த்ததும் உற்சாகம்.. சூழ்ந்துகொண்ட அமெரிக்க எம்.பிக்கள்.. செல்பி, ஆட்டோகிரப் எடுக்க ஆர்வம்
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். சுமார் 1 மணி நேரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார். பிரதமர் மோடி பேசி முடிந்ததும் அவருடன் செல்பி எடுக்க அமெரிக்க எம்.பிக்கள் ஆர்வம் காட்டினர்.
அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையற்றினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சை கேட்க அமெரிக்க எம்.பிக்கள் ஆர்வத்துடன் நாடாளுமன்றத்தில் கூடியிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசினார்.

அமெரிக்க எம்.பிக்கள் மட்டும் இன்றி இந்திய வம்சாவளி சமுகத்தினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பேசி முடித்ததும், அமெரிக்க எம்.பிக்கள் மற்றும் இந்திய வம்சாவளி சமூகத்தினர் கை தட்டி பாராட்டினர். தொடர்ந்து பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்கவும் ஆட்டோகிராஃப் வாங்கவும் ஆர்வம் காட்டினர்.

சில எம்.பிக்கள் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் ஓடி வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்திய சமூகத்தினர் பேசிய போது வந்தே பாரத், பாரத் மாதா கி ஜெய் எனவும் கோஷங்கள் எழுந்தது. பிரதமர் மோடியுடன் சிரித்த முகத்துடன் அமெரிக்க எம்.பிக்களுக்கும் ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்.












Click it and Unblock the Notifications