நம்மதான் தோளில் சுமக்கனும்..பைடனிடம் பேசிய ஜி ஜின்பிங்.. உக்ரைன் போரால் கழற்றி விடப்படுகிறதா ரஷ்யா?
வாஷிங்டன் : உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசிய நிலையில், பேச்சின் போது போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவரிடம் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் தரப்பில் 816 பேர் கொல்லப்பட்டதாகவும், 1333 பேர் காயமடைந்ததாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது.
இன்று மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த தியேட்டர் மீது ரஷியா தாக்குதல் நடத்திய கட்டிட இடுபாடுகளில் இருந்து இதுவரை 130 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர்
இந்நிலையில் லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமான பராமரிப்பு ஆலை மீது இன்று காலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. லிவிவ் நகரம், போலந்து எல்லையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. லிவிவ் நகர் மீது கருங்கடல் பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடும் தாக்குதல்
தென்கிழக்கு நகரமான மரியுபோல், ரஷிய படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். உக்ரைன் மீதான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குலக நாடுகளின் தடைகளில் இருந்து ரஷியாவை காப்பாற்றினால், சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

சீனா அமெரிக்கா பேச்சு
உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிய நிலையில், பேச்சின் போது போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவரிடம் ஜோபைடன் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமைதிக்கான சர்வதேசப் பொறுப்புகளை சீனாவும், அமெரிக்காவும் தோளில் சுமக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
உலக அமைதிக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக உலகின் முதல் இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சரியான பாதையில் முன்னேற வேண்டும் என்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், போர் யாருடைய நலனுக்காகவும் இல்லை என்றும் மாநிலத்துக்கும் மாநிலத்துக்கும் இடையிலான உறவுகள் இராணுவப் பகை நிலைக்குச் செல்ல முடியாது எனவும் ஜின்பிங் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைதியும் பாதுகாப்பும் சர்வதேச சமூகத்தின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்கள் என்ற ஜின் பிங், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தாக்குதலை அவர் நேரடியாக விமர்சித்தாரா என்பது தெரியவில்லை.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications