காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்.. அமெரிக்காவோட பிளானை பாருங்க
வாஷிங்டன்: காசா - இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கான அமைதி வாரியத்தை ஏற்படுத்துவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளதாக கூறினார். டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் - காசா இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குவதும் என மத்திய கிழக்கில் ஒரே பதற்றமான பல ஆண்டுகளாக நிலவியது.

இஸ்ரேல் ஹமாஸ்
இந்த சூழலில்தான், கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் பிடித்து சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் ஓய மாட்டோம் எனக்கூறி காசா மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
எனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து எகிப்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சந்திப்பின்போது இருதரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அமைதி ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
20 அம்ச அமைதி திட்டம்
ஆனால் ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய காசா, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு டிரம்பை வலியுறுத்தியது. இதையடுத்து, போர் நிறுத்தத்தின் இரண்டாவது கட்டமாக காசா அமைதி வாரியத்தை அமைத்த டிரம்ப் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். இதன்மூலம் பாலஸ்தீனத்தை நிர்வகிக்கப் போவதாகவும் கூறி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், காசாவில் 20 அம்ச அமைதி திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கு நுழைந்து விட்டோம். எனவே எகிப்து, துருக்கி, கத்தார் ஆதரவுடன் காசாவில் ஆயுத குறைப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். அதன்படி ஆயுத குறைப்பு, உயிரிழந்த பணய கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் ஹமாஸ் அமைப்பினர் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் உறவு
காசா மக்கள் போதுமான அளவுக்கு துன்பப்பட்டு விட்டனர். எனவே போரை நிறுத்த இதுவே சரியான நேரம் என்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கிய இந்த அமைதி வாரியத்தில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்க வெளியுறவு செயலர் மார்க் ருபியோ, டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு
இதற்கிடையே, இந்த அமைதி வாரியத்தில் இடம் பெறுமாறு இந்தியாவுக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்களுக்கும் அழைப்பு விடுத்து இருப்பதாக பாகிஸ்தான் ஏற்கனவே கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளுடன் வரலாற்று ரீதியிலான உறவை கொண்டுள்ளது.
இஸ்ரேலுடன் மிக முக்கியத்துவம் வாய்ந்த உறவை இந்தியா கொண்டுள்ள நிலையில், பாலஸ்தீனத்திற்கும் மனிதாபிமான உதவிகளை அளித்து வருகிறது. இத்தகைய சூழலில் டிரம்பின் அழைப்பு மிகவும் முக்கியத்தும் பெற்றுள்ளது. டிரம்ப் விடுத்து இருக்கும் அழைப்புக்கு இதுவரை ஹங்கேரி மட்டுமே எந்த வித கேள்வியும் எழுப்பாமல் சம்மதம் தெரிவித்துள்ளது.
-
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார் -
ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்? -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
விஷயம் ரொம்ப தீவிரமாகுது! டிரம்ப் பேச்சை கேட்டு.. ஈரான் மேட்டரில் நுழையும் பிரிட்டன்! -
உலக போரை இழுத்துவிடும் டிரம்ப்? ஐரோப்பிய நாடுகளுக்கு தந்த வார்னிங்.. 'நேட்டோ' பற்றி சர்ச்சை கருத்து -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி












Click it and Unblock the Notifications