அமெரிக்காவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு-ஒரே நாளில் 629 பேர் மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,580 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 629 ஆகவும் பதிவாகி இருந்தது.
உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,61,236. உலகம் முழுவதும் கொரோனாவால் நேற்று மட்டும் 5,200 பேர் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4,56,724 பேர் மீண்டனர். அமெரிக்காவில் நேற்று 73,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் நேற்று 629 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் 37,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. துருக்கியில் 27,188, ரஷ்யாவில் 22,236, பிலிப்பைன்ஸில் 18,319 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. உலக அளவில் ரஷ்யாவில்தான் நேற்று கொரோனாவால் அதிக மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
ரஷ்யாவில் நேற்று மட்டும் 779 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 629 பேர் ஒரே நாளில் கொரோனாவால் மரணம் அடைந்தனர். ஈரானில் 289, மலேசியாவில் 258, பிரேசிலில் 206 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 14,905 ஆக பதிவாகி இருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 181 என நீண்ட காலத்துக்குப் பிறகு குறைந்துள்ளது. இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது.
கேரளாவில் நேற்று 11,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. கேரளாவில் நேற்று கொரோனாவுக்கு 58 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 2,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் நேற்று 32 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் நேற்று 1657 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நேற்று கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 19 ஆக பதிவாகி இருந்தது.
கர்நாடகாவில் 504 பேருக்கும் ஆந்திராவில் 618 பேருக்கும் மேற்கு வங்கத்தில் 472 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒடிஷா மாநிலத்தில் 444 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications