"ஒரே ஆண்டில் 85,000 விசாக்கள் ரத்து.." அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடி.. இந்தியர்களுக்கு பாதிப்பு?
வாஷிங்டன்: டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் மட்டும் சுமார் 85,000 விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. சிறு தவறு செய்தாலே வெளிநாட்டினர் மீது டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில், வரும் காலங்களிலும் இது தொடரும் என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு அவர் விசா விதிகளை மொத்தமாக மாற்றியுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோதக் குடியேறிகள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் வசிப்போருக்கும் இதனால் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சிறிய விதிமீறல்களுக்கே கூட நாடுகடத்தல் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.

டிரம்ப்
இதற்கிடையே அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் மீதான நடவடிக்கைகளை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியது. சிறு தவறு செய்வோரின் விசா கூட ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். முன்பு இதுபோன்ற தவறுகளுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்படும் நிலையில், டிரம்ப் அரசு நேரடியாக நாடுகடத்தலை ஆரம்பித்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உட்படப் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
85,000 விசாக்கள் ரத்து
கடந்த ஜனவரி மாதம் முதல் மட்டும் சுமார் 85,000 விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. டிரம்ப் அரசு குடிவரவு விதிகளை எந்தளவுக்குக் கடுமையாக அமல்படுத்துகிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க உள் துறை கூறுகையில், "ஜனவரி முதல் 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிபர் டிரம்ப்பும், உள் துறை அமைச்சர் ரூபியோவும் ஒரு எளிய ரூல்ஸை பின்பற்றுகிறார்கள். அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் அது.. அதை அவர்கள் நிறுத்தவே மாட்டார்கள்" என பதிவிட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பான நாடாக மாற்றுவோம் என்ற போட்டோவுடன் டிரம்ப் படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

அமெரிக்கா சொல்வது என்ன!
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் மேலும் கூறுகையில், "ரத்து செய்யப்பட்ட விசாக்களில் 8,000க்கும் மேற்பட்டவை மாணவர்களுக்குச் சொந்தமான விசாக்கள்.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், திருட்டு மற்றும் தாக்குதல் போன்ற குற்றங்கள் காரணமாகவே விசாக்களை ரத்து செய்துள்ளோம். கிட்டத்தட்ட பாதி விசாக்கள் இந்த காரணத்திற்காகவே ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றார். அதேநேரம் மற்ற விசாக்கள் எதற்காக ரத்து செய்யப்பட்டன என்ற தகவலை அவர் பகிரவில்லை.
அதேபோல பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறி அமெரிக்கா சில விசாக்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது. உதாரணமாக இஸ்ரேல் காசா மோதலில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த சர்வதேச மாணவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளன. அதேபோல தீவிர வலதுசாரியான சார்லி கிர்க்கின் கொலையைக் கொண்டாடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிலரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடரும்
டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை இப்போது நிறுத்தாதாம். வரும் காலங்களிலும் அமெரிக்காவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரையும் கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறது. விசா என்பது உரிமை இல்லை சலுகை என்றும் உள்ளூர் விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் வந்த பிறகு விசா ரூல்ஸ் கடுமையாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தான் டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தையும் உயர்த்தி இருந்தார். இதனால் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஹெச்-1பி விசா பொதுவாகவே இந்தியர்களுக்கே அதிகம் கிடைக்கும் நிலையில், இந்தியர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications