"இந்தியா சீக்கிரம் வழிக்கு வரணும்.. இல்லைனா விளைவுகள் மோசமாக இருக்கும்!" அமெரிக்கா திமிர் பேச்சு
வாஷிங்டன்: இந்தியா மீது அமெரிக்கா 50% வரிகளை விதித்துள்ள நிலையில், இது இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவைச் சீண்டும் கருத்துகளைக் கூறியுள்ள வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்தியா சீக்கிரம் வழிக்கு வர வேண்டும் என்றும் இல்லையென்றால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்தியா மீது டிரம்ப் அரசு 50% வரியை விதித்துள்ளது. ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாலேயே உக்ரைன் போர் தொடர்வதாகச் சொல்லி டிரம்ப் நிர்வாகம் இந்த வரியை விதித்துள்ளது. இது இரு நாட்டு உறவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த வரியால் இந்தியா அமெரிக்கா வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா
இதற்கிடையே வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் இந்தியாவைச் சீண்டும் வகையிலான கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்தியா சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அது இந்தியாவுக்கு நல்லதாக இருக்காது என்று பீட்டர் நவரோ கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் செயல்பாடுகள் தனக்கு ஆத்திரம் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவை வரி மகாராஜா என்றும் குறிப்பிட்டார்.
உலக நாடுகள்
தொடர்ந்து பேசிய அவர், "நான் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. அமெரிக்காவுக்கு எதிராக எந்தவொரு நாட்டையும் விட இந்தியா தான் அதிகபட்ச வரிகளை வசூலிக்கிறது. இது முற்றிலும் உண்மை. இந்த விவகாரத்தில் ஒரு முடிவு தேவைப்படுகிறது.. அதற்காகவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா உடன் மிக சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயல்படுகின்றன. அமெரிக்காவால் தங்களுக்கு அதிக லாபம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். மேலும், அமெரிக்க மார்க்கெட்டின் தேவையையும் அவர்கள் புரிந்து கொண்டனர்.
இந்தியா வழிக்கு வரும்
சீக்கிரமே ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதைப் புரிந்து கொண்டு வழிக்கு வரவேண்டும். இல்லையென்றால், அது ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்த்துச் செயல்படுவது என்றே அர்த்தம். இது இந்தியாவுக்கு நல்லதல்ல" என்றார்.
ரஷ்யா கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவது குறித்துப் பேசிய அவர், "உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் முன், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெரிய அளவில் எண்ணெய் வாங்கவில்லை.. ஆனால், மோதல் தொடங்கிய பிறகு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி, அதைச் சுத்திகரித்து உலக நாடுகளுக்கு விற்று லாபம் பார்க்கிறது. ரஷ்ய சுத்திகரிப்பு ஆலைகளும் இந்திய மண்ணில் வந்து லாபம் ஈட்டுகின்றன. இதனால் உக்ரைன் போர் தொடர்கிறது. அமெரிக்காவும் வேறு வழியில்லாமல் போரைச் சமாளிக்கத் தனது நிதியைக் கொடுக்க வேண்டி இருக்கிறது" என்றார்.
சீனாவுக்கு வரி?
இப்போதும் ரஷ்ய எண்ணெய்யை இந்தியாவை விடச் சீனா அதிகமாக வாங்கி வருகிறது. இந்தியாவுக்கு வரி விதித்துள்ள அமெரிக்கா, சீனா மீது எந்தவொரு வரியையும் விதிக்காமல் இருக்கிறது. அதைக் கடந்த காலங்களிலேயே இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. இருப்பினும், போருக்கு முன்பிருந்தே ரஷ்ய எண்ணெய்யைச் சீனா வாங்குவதால் அவர்களுக்கு வரி விதிக்க தேவையில்லை என வினோதமான விளக்கத்தை அமெரிக்கா கூறியது.
இது குறித்த கேள்விக்கு பீட்டர் நவரோ, "நாம் இங்கு ஒரு மெல்லிய கோட்டில் நடக்கிறோம். முதலில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும். அது போர் முடிந்து அமைதி திரும்பக் காரணமாக இருக்கும். அதேபோல ஐரோப்பாவும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். சீனாவை பொறுத்தவரை ஏற்கனவே அதிக வரி விதித்திருக்கிறோம். அமெரிக்க மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவர்களைப் பாதுகாக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்" என்று பட்டும் படாமல் மட்டும் பதிலளித்தார்.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரீப்ளே -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
வினாடிக்கு ரூ.21.36 லட்சம் காலி.. ஈரான் போரில் அமெரிக்காவின் செலவு என்ன? வாய்ப்பிளக்க வைக்கும் நம்பர்











Click it and Unblock the Notifications