வார்னிங்! ’எல் நினோ’ காலநிலை மாற்றத்தால் பெரும் ஆபத்து ஏற்படுமாம்.. WHO சொல்வது என்ன?
வாஷிங்டன்: 'எல் நினோ' எனும் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கொரோனாவை விட பயங்கரமான வைரஸ்கள் எல்லாம் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரேஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்தார்.
பருவ நிலை மாற்றம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இன்னும் சில வருடங்களில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்தால், தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். அது மட்டும் இன்றி கடுமையான வறட்சி, தாங்க முடியாத வெப்பம் என மனிதர்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நோய்களின் தாக்கமும் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறும் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், 'எல் நினோ' எனும் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம் எனவும் கொரோனாவை விட பயங்கரமான வைரஸ்கள் எல்லாம் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்தார்.
பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் எல் நினோ பாதிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:- எல்நினோ நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் தயாராகி வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு , ஜிகா மற்றும் சிக்குன் குனியா போன்ற வைரஸ்கள் அதிகரிக்கக் கூடும்.
கால நிலை மாற்றத்தின் விளைவுள் மற்றும் கொசுக்களின் இனப்பெருக்கம் ஆகியவை இந்த நோய் பரவலுக்கு வழிவகுக்கும். கால நிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு, பொருளாதார சிக்கலும் ஏற்படும்" என்றார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கியது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ஒட்டுமொத்த உலகத்திலும் ஒரு சேர பாதிப்பை ஏற்படுத்தி பெரும் பொருளாதார சிக்கலையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திய கொரோனா தற்போதுதான் மெல்ல மெல்ல அகன்று வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கும் இந்த சூழலில் தற்போது கால நிலை மாற்றத்தால் கொரோனாவை விட அதிக ஆபத்து கொண்ட பயங்கரமான வைரஸ்கள் தாக்கலாம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications