"மனைவி+ காதலி.." ஒரே நேரத்தில் உல்லாசம்! இளைஞர் போட்ட பிளான்.. கடைசியில் அடப்பாவமே! குமட்டும் ஆபாசம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பல விநோதமான சம்பவங்கள் நடக்கும். அப்படிதான் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்த ஒரு தம்பதிக்கு எதிர்பாராத ட்விஸ்ட் சம்பவம் நடந்துள்ளது.
என்ன தான் உலக வல்லரசாக அமெரிக்கா பார்க்கப்பட்டாலும் கூட அங்குப் பல வினோதமான விஷயங்கள் நடக்கும். நாம் இங்கே கனவிலும் யோசிக்காத பல வினோதமான காரியங்களும் கூட அங்கு நடக்கும்.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் படிக்கும் நெட்டிசன்கள், இதற்கெல்லாம் என்ன சொல்வது என்றே தெரியாமல் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்

அமெரிக்கா
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மன்ரோ கவுண்டியில் வசிக்கும் தம்பதி ஸ்டீவன் லோபஸ் (31), ஏஞ்சலா வாஸ்குவெஸ் (20). இவர்கள் ஓபன் ரிலேஷன்சிப்பில் இருந்துள்ளனர். அதாவது திருமணப் பந்தத்தில் இருந்தாலும் கூட, இவர்கள் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இருவரும் தங்கள் பார்டனருக்கு தெரிந்தாலுமே கூட இப்படி தான் மற்றவர்களுடனும் உடலுறவை வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பெயர் தான் ஓபன் ரிலேஷன்சிப் ஆகும்.

ஒரே நேரத்தில்
இதில் ஸ்டீவன் அங்கே டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது டாக்ஸி சவாரியில் 29 வயதான டெல்லா டிராப்பர் என்பவரைச் சந்தித்துள்ளார். டிராப்பரை பார்த்தவுடன் ஸ்டீவனுக்கு பிடித்துவிட்டதாம். இதனால் அவர் புதிய பிளான் ஒன்றைப் போட்டுள்ளார். அதாவது தனது மனைவி ஏஞ்சலா மற்றும் டிராப்பர் என்று இருவருடனும் ஒரே நேரத்தில் உல்லாசமாக இருக்க பிளான் போட்டுள்ளார். ஓபன் ரிலேஷனில் இருப்பதால் மனைவி ஒப்புக் கொள்வார் என்று தெரியும்.

ட்விஸ்ட்
இதனால் டிராப்பரிடம் மட்டும் இது குறித்துக் கேட்டுள்ளார். அவரும் உடனே ஓகே சொல்ல, ஸ்டீவனுக்கு ஒரே ஹேப்பி தான். அதன் பிறகு இது குறித்து தனது மனைவி ஏஞ்சிலாவிடம் தெரிவிக்க, அவரும் இதற்கு ரெடியாகியுள்ளார். அதன்படி ஒரு நாள் டிராப்பரை தங்கள் வீட்டிற்கு இருவரும் அழைத்துள்ளனர். தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத் தான் போய் கொண்டிருந்துள்ளது. இருப்பினும், போகப் போக டிராப்பர் பேசும் பேச்சு அந்த தம்பதியை கடுப்பாக்கியுள்ளது.

அநாகரிக பேச்சு
அந்த தம்பதியின் அந்தரங்க உறுப்பைப் பற்றி டிராப்பர் தப்பாகப் பேசியதாகத் தெரிகிறது. இப்படியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால், கடுப்பான அந்த தம்பதி, "எல்லாவற்றையும்" உடனடியாக நிறுத்தி விட்டு, அவர்களை உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், டிராப்பர் அங்கிருந்து நகரவில்லை. அங்கே சோபாவில் அமர்ந்த டிராப்பர் தொடர்ந்து அந்த தம்பதியின் அந்தர உறுப்புகள் குறித்துக் கிண்டல் செய்ததுடன் அவர்களை அவதூறாகப் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த அந்த தம்பதி, அந்த பெண்ணை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளியுள்ளனர். ஆனால், இத்துடன் அந்தச் சம்பவம் முடிந்துவிடவில்லை. அந்த தம்பதி தன்னை கூப்பிட்டு அசிங்கப்படுத்தியதாக நினைத்த டிராப்பர், காரை எடுத்து வந்த வீட்டின் முன் இருந்த அவர்கள் மீது மோதியுள்ளார். இதில் ஏஞ்சிலாவின் காலில் கார் மோதி சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

தப்பியோட்டம்
தனது மனைவியை இடித்ததால் ஆத்திரமடைந்த ஸ்டீவன், அங்கே இருந்த ஒரு கல்லை எடுத்து டிராப்பரின் கார் கண்ணாடியை உடைத்துத் தள்ளியுள்ளார். சிறிது நேரம் கழித்து டிராப்பர் மீண்டும் காரில் இருந்து இறங்கி வந்து ஏஞ்சிலாவை தாக்க முயன்றுள்ளார். இதனால் அஞ்சிய ஏஞ்சிலா பயத்தில் கத்தியுள்ளார். இதைக் கேட்டு அருகே இருந்த ஸ்டீவன் அவரை பிடிக்க வந்துள்ளார். ஆனால், அதற்குள் டிராப்பர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

யார் அந்த பெண்
இதையடுத்து அவர் மீது அந்த தம்பதி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இருப்பினும், இரு நாட்களில் அவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைதானார். விசாரணையில் அவர் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டில் கைதாகி இருந்ததும். அதில் ஜாமீனில் வெளியே வந்திருந்ததும் தெரிய வந்தது. ஜாமீனில் வந்து தான் அவர் இதையெல்லாம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications