நீர்நிலைகளை பாதுகாக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்: உயர் நீதிமன்றத்தில் அரசு விரிவான அறிக்கை
நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தலைமைச் செயலர் அறிக்கை
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

நீர்நிலைகள் பாதுகாப்பு - குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
அந்த அறிக்கையில் "நீர்நிலைகளை பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நீர்வள ஆதாரங்களை பெருக்கி வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கான நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றி வருகிறோம், கடந்த 2020 ஆம் ஆண்டே இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு பதிவு கூடாது
அந்த பரிந்துரைகளின்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுத்துதுள்ளார். அதேபோல நீர்நிலை கட்டுமானங்களுக்கு எந்தவித மின் இணைப்பும் தரக்கூடாது, ஊரக வளர்ச்சித்துறை கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி அளிக்ககூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நீர்வல மேம்பாட்டுக்கு தனித்துறை
நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறையே உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கடந்த ஜீலை மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியளர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அதில் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூர் இளைஞர்கள், விவசாயிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்பு நீர்நிலைகள் மீட்பு
ஆக்கிமிப்பு செய்யப்பட்ட சிறு குட்டைகள் குளங்களை உள்ளுர் விவசாயிகள் இளைஞர்களின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்டி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரித்து, வருவாய்துறை செயலாளருக்கு அனுப்பு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் நீர் இருப்பையும் பாதுகாத்து பேண முடிவு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமல்லாமல், நீர்நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்ததுபோல் பேணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்டு உரிய தரத்துடன் பாதுகாக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை நீர்நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப்பட்டு, மழைகாலங்களில் திடீர் என திறந்துவிடப்பட்டு வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் கன மழையிலும் நீர் திறப்பில் ஒழுங்குமுறை
சென்னையில் கடந்த மாதம் நான்குமுறை பெய்த கனமழையால் ஆயிரம் மில்லி மீட்டருக்கு மேல் மழை இருந்தது. இதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு செயல்பட்டுவருகிறது" என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications