மதுரையில் உதயம்.. ‛தி சென்னை சில்க்ஸ்’-ல் திருமண பட்டு ஜவுளிக்கான பிரத்யேக பிரிவு திறப்பு
சென்னை: மதுரையில் செயல்பட்டு வரும் 'தி சென்னை சில்க்ஸ்'-ல் பிரத்யேகமாக திருமண பட்டு ஜவுளி தனிப்பிரிவு விரிவுபடுத்தப்பட்டு மிக பிரம்மாண்டமாய் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிரபலமான ஜவுளிக்கடையாக ‛தி சென்னை சில்க்ஸ்' உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த ஜவுளிக்கடைகள் செயல்பட்டு வருகிறது. சிறுவர், சிறுமியர் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஆடை ரகங்கள் இங்கு கிடைக்கின்றன.

சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களுக்கு என்று தனித்தனியாக ‛தி சென்னை சில்க்ஸ்' ஜவுளிக்கடைகளில் வெவ்வேறு தளங்களில் தனிப்பிரிவுகள் உள்ளன.
மதுரை மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி தங்கம் தியேட்டர் வளாகத்தில் 'தி சென்னை சில்க்ஸ்' உள்ளது. திருமண நிகழ்விற்கான பிரத்யேகப் பட்டு ஜவுளித் தளம் இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் 'தி சென்னை சில்க்ஸ்' நிர்வாக இயக்குனர் கே சிவலிங்கம், பத்மா சிவலிங்கம், எஸ் கார்த்தி, கே ஸ்ருதி, கேகே ஆதிரை மீனாக்ஷி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இங்கு பெண்களுக்கு விவாஹா முகூர்த்த பட்டுகள், சாப்ட் சில்க் வகைகள், பேன்சி சேலைகளும், லெஹெங்காக்களும், ஆண்களுக்கான பட்டு வேஷ்டி சட்டைகளும் இண்டோ வெஸ்டர்ன் சூட் மற்றும் ஷெர்வானி கலெக்க்ஷனும், Elite Boys & Girls Ethnic Wears & Suit Wears வகைகள் விலைக்கேற்றாற்போல் பிராண்டட் வகைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் மதுரையை தவிர்த்து சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம், வேலூர், சேலம், விழுப்புரம், ஓசூர் உள்பட மேலும் பல இடங்களில் ‛தி சென்னை சில்க்ஸ்' உள்ளது. அதேபோல் தமிழகத்துக்கு அப்பாற்பட்டு புதுச்சேரி, கேரளாவின் எர்ணாகுளம், ஆந்திராவின் சித்தூர் உள்பட பிற முக்கிய நகரங்களிலும் ‛தி சென்னை சில்க்ஸ்' செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications