Ragi Idly, Dosa: கேழ்வரகை கொண்டு இட்லி, தோசை செய்வது எப்படி?
Subscribe to Oneindia Tamil
High Fibre Protein recipe: அதிக புரதம், நார்ச்சத்து கொண்ட கோழ்வரகை கொண்டு காலையில் சிற்றுண்டி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
கேழ்வரகில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. மேலும் இதில் புரதமும் நார்ச்சத்தும் நிறைந்தது. இந்த கேழ்வரகை கொண்டு சூப்பரான இட்லி, தோசை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
கேழ்வரகு- 3 டம்ளர்
இட்லி அரிசி - 2 டம்ளர்
உளுந்து- 1 கப்
வெந்தயம்- 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை அவல்- 2 கப்
செய்முறை
கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம், அவல் ஆகியவற்றை நன்கு கழுவி தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அவற்றை எடுத்து மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும்.
அந்த மாவில் உப்பு போட்டு வைத்துக் கொண்டு புளிக்க விடவும். காலையில் இட்லி அல்லது தோசையை ஊற்றிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications