பிரிட்ஜில் வைத்தாலும் இட்லி மாவு புளித்து விடுகிறதா? இந்த ஒரு பொருள் போதுமே!

Subscribe to Oneindia Tamil

How to protect Idly Maavu: பிரிட்ஜில் வைத்தாலும் இட்லி மாவு புளித்து விடுகிறதா? அப்படியென்றால் அது சீக்கிரம் புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

பெண்கள் வேலைக்கு செல்வதால் இந்த பரபரப்பான உலகில், இட்லி , தோசை மாவை வாரத்தில் ஒரு நாள் அரைத்துவிட்டு அதை வைத்து அந்த ஒரு வாரம் முழுக்க ஓட்டி விடுவார்கள். இப்படி அரைப்பதால் இவர்களுக்கு இரு பிரச்சினைகள்.

recipes idly batter

ஒன்று குளிர் காலத்தில் இட்லி மாவு புளிக்கவே புளிக்காது. இதனால் இட்லி சுவையில்லாமல் இருக்கும். இன்னொன்று வெயில் காலம் வந்தாலே பிரிட்ஜில் வைத்திருந்தாலும் இட்லி மாவு புளித்து விடும்.

தோசை ஊற்றினாலும் அந்த புளிப்பு அடங்காது. இதனால் அதில் வெங்காயத்தை போட்டு ஊத்தப்பம் போல் செய்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். ஒரு சில வீடுகளில் பிரிட்ஜில் வைக்கும் மாவில் தண்ணீர் விட்டது போல் ஆகி அதிகம் நீர்த்து போய்விடும்.

இதில் தோசை ஊற்றினால் தவாவிலேயே ஒட்டி கொள்ளும். இட்லி ஊற்றினால் மெல்லியதாக வரும். எனவே இட்லி அதிக அளவு புளிக்காமல் இருக்க ஒரு டிப்ஸ் பார்க்கலாமா? இட்லி மாவை டப்பாவில் ஊற்றி மூடி போட்டு மூடி, அந்த மூடியின் மேல் சிறிது தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள்.

அப்படி செய்தால் மாவு சீக்கிரம் புளித்து போகாது. நீண்ட நாட்களானாலும் மாவு பிரஷ்ஷாகவே இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+