இன்று ஆடி அமாவாசை
அமாவாசை என்பது இந்துக்கள் குறிப்பாக பிராமணர்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும்.
அமாவாசையன்று பிக்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது.
பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர்கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.
அமாவாசையில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன.
ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும்,பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.
அமாவாசை குறித்து ஒரு புராணக்கதையும் உண்டு:
அதுஅமாவாசை தினத்தன்று சூரியன் தனது சக்தியால் சந்திரனுக்கு அமிர்தம் வழங்கும் நாள்தான் அமாவாசை என புராணங்கள் கூறுகின்றன. சந்திரன் தான்இழந்த கலைகளை பெறுவதற்காக சூரியனை பிரார்தித்து கொண்டதால் சூரியன் அவருக்கு அமிர்தம் வழங்கியதாகவும் புராண கதைகள் தெரிவிக்கின்றன.
ஆடி அமாவாசை 20.07.2001 அன்று நிகழ்கிறது. அன்றைய தினம் கடலிலோ அல்லது நதியிலோ நீராடி பித்ருக்களுக்கு பூஜை செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications